Alagappa University Study Centre Aranthangi

Alagappa University Study Centre Aranthangi DISTANCE EDUCATION LEARNING CENTRE. CONDUCTS SEMINAR AND EXAMS IN ARANTHANGI

19/10/2025
07/09/2025
ADMISSIONS OPEN FOR UG|PG|MBA|MCA..
15/02/2021

ADMISSIONS OPEN FOR UG|PG|MBA|MCA..

ADMISSION OPENS FOR UG/PG/MBA/MCA AND DIPLOMA COURSES..
23/05/2020

ADMISSION OPENS FOR UG/PG/MBA/MCA AND DIPLOMA COURSES..

RANKED NO 1 IN TAMILNADU AND NO 2 IN INDIA..
12/10/2018

RANKED NO 1 IN TAMILNADU AND NO 2 IN INDIA..

17/09/2018

பல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி

பல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்படும் என்பதை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதற்கான சட்டத் திருத்தத்தை (திறந்தநிலை- தொலைநிலை பல்கலைக்கழகங்களுக்கான மூன்றாவது சட்டத் திருத்த வழிகாட்டி-2018) யுஜிசி திங்கள்கிழமை வெளியிட்டது.இதில், தொலைநிலையில் அல்லாமல் திறந்தநிலையில் மட்டும் படிப்புகளை வழங்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கு ஒராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு யுஜிசி வசம் வந்ததைத் தொடா்ந்து, திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது.அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது.

அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.இது கல்வி நிறுவனங்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்பின் காரணமாக, தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஏனெனில் தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 3.26 அளவுக்கும் குறைவான நாக் புள்ளிகளைப் பெற்றிருந்தன.இது பல்கலைக்கழகங்களுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த நிபந்தனையைத் தளா்த்த தமிழக உயா் கல்வித் துறை சாா்பிலும், பல்கலைக்கழகங்கள் சாா்பிலும் தனித்தனியாக யுஜிசி-க்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், யுஜிசி தனது நிபந்தனையை இப்போது சட்டத் திருத்த வடிவில் வெளியிட்டுள்ளது. இது யுஜிசி (திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி) மூன்றாவது சட்டத் திருத்தம் 2018 என்ற பெயரில் அழைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.அதன்படி, 2019 ஜூலை - 2020 ஜூன் காலத்தில் முடிவடையும் கல்விப் பருவத்துக்கு முன்பாக 3.26 நாக் புள்ளிகளைப் பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் படிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படும்.



அவ்வாறு பெறத் தவறும் பல்கலைக்கழகங்களுக்கு அதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட மாட்டாது.இந்த நிபந்தனை திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களுக்குப் பொருந்தாது. ஆனால், இந்த சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டதிலிருந்து ஓராண்டுக்குள்ளாக திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களும் நாக் அங்கீகாரத்தை பெற வேண்டியது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தொலைநிலைக் கல்வி நிறுவன கல்வி மையங்களில் உதவிப் பேராசிரியா் தகுதிக்கு இணையான நபா் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட வேண்டும். பாட வாரியாக 100 மாணவா்களுக்கு ஒரு ஆலோசகா் நியமிக்கப்பட வேண்டும். ஆய்வகம், நூலகம், இணையதள வசதி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமையாக இடம்பெற்றிருக்கவேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலை காரணமாக, தமிவகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவை மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை திட்டவட்டமாகியுள்ளது.இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியா் ஒருவா் கூறுகையில், நாக் புள்ளி நிபந்தனையை யுஜிசி இப்போது சட்டத் திருத்தமாக வெளியிட்டுள்ளதால், பல்கலைக்கழகங்கள் இனி குறுக்கு வழிகளைக் கையாள இயலாது. எனவே, 2019-20 கல்வியாண்டுக்கு முன்பாக 3.26 நாக் புள்ளிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை எடுத்தே ஆகவேண்டும். ஆய்வு மற்றும் அங்கீகாரத்துக்கு -நாக்- அமைப்பை அழைக்க முடியும் என்றாா் அவா்.
at September 17, 2018

21/04/2018

🌟பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

🌟இதனால், தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் பட்டம் செல்லாது என யுஜிசியால் அறிவிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. தொலைநிலை படிப்புகளைக் கட்டுப்படுத்தி வரும் யுஜிசி, உயர் கல்வித் தரத்தை மேம்படுத்தும்வகையில் அண்மையில் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதில், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ('நாக்') அங்கீகாரம் பெற்று குறைந்தபட்சம் 3.26 புள்ளிகளைப் பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் எனத் தெரிவித்திருந்தது.

🌟'நாக்' அங்கீகாரம்: 'நாக்' கவுன்சில் அதிகபட்சமாக 4 புள்ளிகளைக் கொண்ட அளவீடு மூலம் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை பல்வேறு காரணிகளின் கீழ் ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும். இதில் 3.51 முதல் 4 புள்ளிகள் பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ (பிளஸ், பிளஸ்) கிரேடு, 3.26 முதல் 3.50 புள்ளிகள் பெறும் நிறுவனங்களுக்கு ஏ (பிளஸ்) கிரேடு, 3.01 முதல் 3.25 வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ கிரேடு வழங்கும். மேலும் 2.76 முதல் 3 புள்ளிகள் வரை வாங்கும் கல்வி நிறுவனத்துக்கு பி (பிளஸ், பிளஸ்) கிரேடு, 2.51 முதல் 2.75 வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு பி (பிளஸ்) கிரேடு, 2.01 முதல் 2.50 புள்ளிகள் வரை பெறும் நிறுவனங்களுக்கு பி கிரேடும், 1.51 முதல் 2 புள்ளிகள் வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு சி கிரேடும் வழங்கும்.

🌟இதில் 1.50 புள்ளிகளும் அதற்குக் கீழ் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது. இந்த நிலையில், யுஜிசி-யின் புதிய வழிகாட்டுதலின் படி பார்க்கும்போது தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 3.26-க்கும் மேற்பட்ட நாக் புள்ளிகளைப் பெற்றுள்ளன. காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழகம் 3.64 புள்ளிகளும், அண்ணா பல்கலைக்கழகம் 3.46 புள்ளிகளும், சென்னைப் பல்கலைக்கழகம் 3.32 புள்ளிகளும் பெற்றுள்ளன. மற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 3.26 புள்ளிகளுக்குக் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன.

🌟'நாக்' புள்ளிகள் காரணமாக...கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 3.11 'நாக்' புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 3.09 புள்ளிகளையும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 3.15 புள்ளிகளையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 3.08 புள்ளிகளையும் பெற்றுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளன.

🌟இவற்றில் திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகியவை மிகக் குறைவாக பி கிரேடு புள்ளிகளையே பெற்றுள்ளன. இந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் கூறியது: யுஜிசி-யின் இந்தக் கட்டுப்பாடு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

🌟தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். யுஜிசி-யின் இந்த புதிய வழிகாட்டுதலால் இந்தியா முழுவதும் 40 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

26/07/2017

DISTANCE EDUCATION CENTRE CONDUCTS SEMINAR AND EXAMS IN ARANTHANGI

Address

OPPOSITE STATE BANK
Aranthangi
614616

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Alagappa University Study Centre Aranthangi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share