05/04/2018
அனைவருக்கும் வணக்கம்
அரசு மேல்நிலை பள்ளி, அனந்தபுரம் கிராமம், போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு-632315
நான் இப்பள்ளியில் பயின்று தற்போது இந்தியன் இரயில்வேயில் வேலை செய்து வருகின்றேன்.....
இப்பள்ளியின் முன்னாள் மாணவனாக இங்கு பதிவிடுகிறேன்....
2013 க்கு முன் இப்பள்ளியில் படித்தவர்களின் எண்ணிக்கை 1200 க்கு மேல் இருந்தது. ஆனால் தற்போது 600 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்
பள்ளியின் மொத்த பரப்பளவு 6.22 ஏக்கர் ஆகும். இதில் விளையாட்டு மைதானத்தின் பரப்பு மட்டுமே 4 ஏக்கர் ஆகும்....திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகப்பெரிய விளையாட்டு மைதானமாகும்
இப்பள்ளியில் படித்த மாணவர்களில் 300 க்கம் மேற்பட்டோர் அரசு (Army, Navy, Railway, TN police, Teacher, TNPSC) போன்ற துறைகளில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்....
இதுவரை இப்பள்ளியில் NCC என்ற முக்கியமான ஒன்றை தொடங்கவில்லை
Ncc course முடித்திருந்தால் Army ல் GD க்கு exam எழுத தேவையில்லை
Army ல் மற்ற துறையான Trade, technical, nursing assistant க்கு extra 5 மதிப்பெண் கிடைக்கும்
Navy க்கு 5 மதிப்பெண்ணும், TN police க்கு 2 மதிப்புண்ணும் NCC certificate வைத்திருந்தால் அரசு வேலைக்கு உதவியாக இருக்கும்
NCC வகுப்பு இப்பள்ளியில் தொடங்கினால் , NCC மூலம் கிடைக்கும் மதிப்பெண்ணால் அரசு வேளையில் சேரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
ஒரு மதிப்பெண்ணால் அரசு வேலை இழப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்
இப்பகுதியில் உள்ளவர்களின் குடும்பம் விவசாய குடும்பமே
ஆனால் அரசு வேலைக்கு செல்ல முயற்சி செய்வோர் எண்ணிக்கை அதிகம்
இவர்களுக்கு NCC இப்பள்ளயில் இருப்பின், இவர்களும் இதில் சேர்ந்து பயன்பெறுவர்
எனவே இத்துறை சார்ந்த அதிகாரிகளும், கல்வியாளர்களும் கருத்தில் கொண்டு இப்பள்ளிக்கு உதவி செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்
இப்படிக்கு
K.Vinayagam
Ananthapuram village & post
Polur Taluk, Tiruvannamalai DT,
Tamil Nadu -632315
Contact: 9500977258, 9566111230