20/07/2026
செய்தி வெளியீடு
*உலக சதுரங்க நாளை முன்னிட்டு மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் சதுரங்கப் போட்டி*
உலக சதுரங்க நாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், தத்தனூரில் அமைந்துள்ள மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களிடையே சதுரங்கப் போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது சிந்தனைத் திறன், திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டி முழுவதும் மாணவர்கள் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையுடன் விளையாடினர்.
மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் பகுப்பாய்வு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெற்ற B.பரணிதரன் II YEAR EEE ,இரண்டாம் பரிசு பெற்ற V.பர்வீந்தர் II YEAR MECHANICAL , மூன்றாம் பரிசு பெற்ற A.திவ்யந்த் III YEAR EEE ஆகிய lமாணவர்களுக்கு
எம் .ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர்
எம் ஆர் ரகுநாதன், இயக்குனர் ஆர் இராஜமாணிக்கம்,
எம் .ஆர் பாலிடெக்னிக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் என்.ஆர் கார்த்திகேயன் மற்றும் முதல்வர் ச.சிவசங்கர் பாராட்டுகளைத் தெரிவித்தது வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர் . இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் G. குணா சிறப்பாக செய்திருந்தார்.
#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்
#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி
#அரியலூர்மாவட்டம்