19/02/2026
தத்தனூர் M. R. பாலிடெக்னிக்* *கல்லூரியில் இணையதள பாதுகாப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் இணையதள பாதுகாப்பு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கணிணி துறை பேராசிரியர் இரா.கார்த்திகா வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் சேர்மன் வழக்கறிஞர் எம். ஆர்.இரகுநாதன் , இயக்குனர் முனைவர் ஆர். இராஜமாணிக்கம், நிர்வாக இயக்குனர் N.R கார்த்திகேயன், முதல்வர். S.சிவசங்கர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ALL THE CHILDREN TRUST(Ariyalur District Co-Ordinator) G.அன்பரசன் MA.,MPhil., அவர்கள் கலந்து கொண்டு
பாதுகாப்பான இணைய தினம் (Safer Internet Day) ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம், இரண்டாவது நாளில் (பொதுவாக பிப்ரவரி 8 முதல் 11-க்குள்) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் இணையத்தை பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக மாற்றவும், சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பான இணைய பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கவும் அனுசரிக்கப்படுகிறது என்று கருத்துகளை எடுத்துரைத்தார்.
மேலும் கல்லூரியின் கணிணி துறைத்தலைவர் கு.எழிலரசி
பாதுகாப்பான இணைய தினம் பற்றிய முக்கிய விவரங்கள்:
நோக்கம்: இணையத்தில் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்தல், சைபர் மிரட்டல்களைத் தடுத்தல், மற்றும் போலி செய்திகளைக் கண்டறிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துதல்.
விழிப்புணர்வு: சைபர் கிரைம்கள், பாலியல் மிரட்டல்கள், தரவு திருட்டு, மற்றும் வங்கி மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
கொண்டாட்டம்: உலகளவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இணையப் பாதுகாப்பு குறித்த பயிற்சிப் பட்டறைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றன.
முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்: வலுவான கடவுச்சொற்களைப் (Passwords) பயன்படுத்துதல், இரண்டு-காரணி அங்கீகாரம் (Two-Factor Authentication) அமைத்தல், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்யாமல் தவிர்த்தல், மற்றும் சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களை குறைவாகப் பகிர்தல்.
இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான இணையப் பயன்பாட்டைக் கற்பிப்பதே இந்த தினத்தின் முக்கிய குறிக்கோளாகும் என்று விரிவாக கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கணிணி துறை மாணவன் P.சுரேந்தர் நன்றியுரை ஆற்றினார்.
#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்
#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி
#அரியலூர்மாவட்டம்