09/04/2026
ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடம், ஏறாவூர்.
புதிய மாணவிகள் அனுமதி - 2026
------------------------------------
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் முழுநேர கற்கைநெறிக்கு புதிய மாணவிகள் அனுமதிக்கப்படவிருக்கிறார்கள்.
இவ்வருடம் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய, அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவிகள் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இது நான்கு வருட கால விடுதி வசதியுடன் கூடிய கற்கெநெறியாகும்.
இக்கற்கைநெறியில் முழுநேரமாக இஸ்லாமிய மார்க்க கல்வி போதிக்கப்படுவதோடு, க.பொ.த (உ/த) கலைத்துறைப் பாடங்களும் ஆங்கிலம், சிங்களம், தகவல் தொழினுட்பம் ஆகிய பாடங்களும் தகுதியும் அனுபவமும் கொண்ட ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன.
விண்ணப்ப முடிவுத் திகதி : 15/04/2026
தொடர்புகளுக்கும்
விண்ணப்பப்படிவங்களுக்கும் : 077 122 2022
Higher education