27/10/2016
பச்சையப்ப முதலியார் காஞ்சிபுரம் பெரிய பாளையத்தில்,1754 ல் பிறந்தார். தந்தை: காஞ்சிபுரம் விசுவநாத முதலியார், தாய்: பூச்சி அம்மாள். பச்சையப்பரின் பிறப்பிற்கு சில தினங்களுக்கு முன்பே அவரின் தந்தை காலமாகி விட்டார் . பின்பு அவரின் தாயார் ஐந்தே வயது நிரம்பிய பச்சையப்பரையும் அவரின் இரு சகோதரிகளையம் அழைத்துக்கொண்டு, சென்னையை அடைந்து, சாமி மேஸ்திரி தெருவில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் ஆங்கில வணிகர்களுக்கு மொழி பெயர்ப்பாளராய் விளங்கிய நாராயணப் பிள்ளை என்ற செல்வரிடம் அடைக்கலம் புகுந்தார். நாராயணப்பிள்ளை அவரை உடன் பிறந்தாளைப் போல் போற்றி, பச்சையப்பருக்கு கணக்கு ,கடிதத் தொடர்பு போன்றவற்றில் பயிற்சியும் ஆங்கில அறிவைப் பெறவும் உதவினார்.பச்சையப்பர் தமது தன்னம்பிக்கை கொண்டே 22 வயதில் பெரும் நிதியாளராகவும் வணிகமேதையாகவும் திகழ்ந்தார். அவர் தமது சொத்துக்கள் அனைத்தையும் இறைவனுக்கும் மனிதத்திற்கும் அர்ப்பணித்தார். அவர் 1794ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று கும்பகோணத்தில் இருந்தபோதுதான் தமது மரணம் குறித்து ஓர் முன்னறிவிப்பைப் பெற்று தமது உயிலை எழுதினார். அவரது உயில் வாசகம்:
“
“dedicating, with full knowledge and hearty resignation, all his wealth, in the absence of any male issue, to the sacred service of Siva and Vishnu and to certain charities at various temples and places of pilgrimage, to the er****on of religious edifies, to bounties to the poor, to seminaries of Sanskrit learning and to other objects of general benevolence”.
”
அவரது உயிலைப் பராமரித்தவர்கள் சரியான முறையில் அதனை செலவழிக்காததால் உயர்நீதிமன்றம் தானே அறக்கட்டளை நிதியான மூன்றரை இலக்கம் ரூபாய் பெறுமான சொத்துக்களை அகப்படுத்திக் கொண்ட பின்னர் ஏழரை இலக்கமாக உயர்ந்தது.மூன்றரை இலக்கத்தை கோவில் திருப்பணிகளுக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ளதில் அவர் பெயரில் கல்விச்சேவைகள் துவங்க பயன்படுத்தியது