Nadar Makkal - நாடார் மக்கள்

Nadar Makkal - நாடார் மக்கள் நாடார் மக்களுக்காக நாடார் மக்களால் நடத்தப்படும் பக்கம்...

73% நாடார்9% முக்குவர் (மீனவர்)3% நாயர்3% பறையர்2% முஸ்லீம்விளவங்கோடு தொகுதி, கன்னியாகுமரி மாவட்டம். இந்த தொகுதியில் இரு...
09/06/2025

73% நாடார்
9% முக்குவர் (மீனவர்)
3% நாயர்
3% பறையர்
2% முஸ்லீம்

விளவங்கோடு தொகுதி, கன்னியாகுமரி மாவட்டம். இந்த தொகுதியில் இருக்கும் வாக்காளர் சதவிகிதம் இது.

இந்த தொகுதியில் "தாரகை கத்பெர்ட்" என்கிற கிறிஸ்தவ மீனவ பெண் MLA வாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நாடார்கள் இதை உணர வேண்டும்.

2026 தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாடார் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும்.

தவறும் பட்சத்தில், நாடார்கள் இதற்கு எதிர்வினை செய்ய வேண்டும்.

நாடார் சங்கங்கள், குறிப்பாக இதற்கு இப்போதே முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். -நன்றி

திருச்சி வேலுச்சாமி அவர்களின் பேச்சில் சில 1952 பாராளுமன்ற தேர்தலில் சிறிவில்லிப்புதூர் தொகுதியில் பெருந்தலைவர் காமராஜர்...
23/10/2024

திருச்சி வேலுச்சாமி அவர்களின் பேச்சில் சில

1952 பாராளுமன்ற தேர்தலில் சிறிவில்லிப்புதூர் தொகுதியில் பெருந்தலைவர் காமராஜர் போட்டியிடுகிறார் அவரை தோற்கடிக்க ராஜாஜி திட்டம் போட்டு , ஈவெராவிடம் செல்கிறார் இருவரும் சேர்ந்து ஜி டி நாயுடுவை வேட்பாளராக நிறுத்துகிறார்கள், நாடார்களின் வாக்குகளை பிரிக்க ஆறுமுகசாமி நாடார் என்பவரையும் நிறுத்துகிறார்கள், ராஜாஜி, ஈவெரா, முத்துராமலிங்க தேவர் ஆகிய மூவரும் காமராஜருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள், ஆனாலும் காமராஜர் வெல்கிறார்

அவர் சொல்லாததில், அதே 52 தேர்தலில் தனது சொந்த தொகுதியில் போட்டியிட்ட முத்துராமலிங்க தேவர் சுயேட்சை வேட்பாளரை விட பின்தங்கி கட்டுத்தொகையை (Deposit) இழக்கிறார், ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாகப்ப செட்டியார் ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் வாக்குகள் வாங்கி வெல்கிறார், சுயேட்சை வேட்பாளர் 28 ஆயிரத்து சொச்சம் ஓட்டுக்கள் வாங்கி மூன்றாமிடம், பார்வேடு பிளாக் சார்பில் போட்டியிட்ட முத்துராமலிங்க தேவர் வெறும் பதினொராயிரத்து சொச்சம் வாக்குகள் வாங்கி டெபாசிட் இழக்கிறார்

ஆனால் அதன் பின்னர் காமராஜரை முதல்வர் ஆக்கியதே பெரியார் என்றும் , காமராஜர் பெரியார் பின் சென்றார் என்பது போன்ற புனைவுகள், காமராஜரை அரசியலுக்கு கொண்டு வந்ததே முத்துராமலிங்க தேவர் என்பது போல வேறு புனைவுகளாக புனைவுகள் உண்மை போல் வலம் வருகிறது..

19/05/2024

குமாரபுரம் தோப்பூர், கன்னியாகுமரி மாவட்டம்

நாடார்களின் சுடலைமாட சுவாமி கொடைவிழா நடக்கிறது.

வில்லுப்பாட்டு பாடுபவர் "வலங்கையரே வலங்கையரே" என பாடுகிறார்.

- பாடும் நாடாருக்கும்
- கேட்கும் நாடார்களுக்கும்

இதன் பொருள் புரியாது, தெரியாது.

தமிழர்களின் படைப்பிரிவுகளில் "வலங்கையர்" படைப்பிரிவு முக்கியமானது. நாடார்கள் வலங்கை பிரிவினர். அதையே வில்லுப்பாட்டில் பாடுகிறார்கள்.

வலங்கையர் என்பது இன்றைய காலகட்டத்தில் Commando force என்றோ Primary striking force என்றோ பொருள் கொள்ளலாம்.

"வலங்கை உய்யக்கொண்டான்" என்பது ராஜ ராஜ சோழனின் முக்கியமான பட்டப்பெயர்.

"வலங்கை உய்யக்கொண்ட ரவி குல சத்திரிய கித்தேரியம்மாள் நாடாச்சி" என்று எனது பாட்டியின் (அப்பாவின் அம்மா) பெயர், திருவாங்கூர் சமஸ்தான கால சொத்து பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. பாட்டி மறவன் குடியிருப்பில் (கன்னியாகுமரி மாவட்டம்) பிறந்தவர்.

- ராஜா நாடார்

சாணார் இசைக்கலைஞர்கள் என்று ஆங்கிலேயர்களால் அடையாளப் படுத்தப்பட்ட நாடார்களின் வில்லலுப்பாட்டுக் கலை இதில் பெரும் நிபுணத்...
05/05/2024

சாணார் இசைக்கலைஞர்கள் என்று ஆங்கிலேயர்களால் அடையாளப் படுத்தப்பட்ட
நாடார்களின் வில்லலுப்பாட்டுக் கலை
இதில் பெரும் நிபுணத்துவம் பெற்றவர்கள் அருதனக்குட்டி
மானாடு சுந்தம் என்பதை கதைப்பாடல் ஓலைச் சுவடிகளின் வாயிலாக அறியமுடிகிறது.
ஆனால் ந வானமாமலை வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த பிச்சைக்குடியே வில்லிசை யின் தந்தை என்பது போன்ற வரலாற்று புணைவை எழுதிச் சென்றுள்ளார்.
இந்த வில்லுப்பாட்டு இன்றளவும் நாடார் சமூகத்தை சேர்ந்த தென்காசி அச்சங்குன்றம் ஊரை சேர்ந்த சான்றோர் குல திலகம் செல்வி மாதவி பட்டி தொட்டி இணையம் என முதன்மையாக திகழ்கிறார்.
ஆனால் தற்போது தூத்துக்குடி மாவட்ட வரலாறு என்ற புத்தகத்தை எழுதி வெளியுட்டுள்ள முத்தாலச்குறிச்சி காமராசு தனது புத்தகத்தில் பிச்சைக்குட்டியை மட்டுமே பதிவு செய்துள்ளார். ஆனால் அருதனக்குட்டி
மானாடு சுந்தம் பற்றிய எந்த தகவலை பதிவு செய்யாமல் ந வானமாமலை செய்த வரலாற்று புரட்டு வேலைக்கு வலுச் சேர்த்ள்ளார்.

11/04/2023

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கையை வில்லுப்பாட்டு பாடி அசத்தும் நம் இரத்த சொந்தம்...

#காமராஜர் #நாடார்

10/04/2023

அர்ஜுன் சம்பத்தை கதறவிட்ட ராஜா நாடார்...
ராஜா நாடார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடிய அர்ஜுன் சம்பத்...
இது நாடார் மக்களை மத ரீதியாக பிரிக்க நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு எச்சரிக்கை...

#நாடார்

02/02/2023

சிமானிடம் கருத்து அல்லது அரசியல் ரீதியாக மோது டா அரவேக்காடு முட்டாளே... "நாடார்" இனத்தை பற்றி எல்லாம் பேச உனக்கு என்ன டா தகுதி தராதரம் குடிகாரா பயலே...

#நாடார்

 #நாடார்களே  #சேர  #சோழ  #பாண்டிய வம்சா வழியினர் என்ற உண்மையை முன்னாள்  #முதல்வர்  #ஜெயலலிதா அவர்கள் உலகிற்கு உரக்க உணர்...
16/11/2022

#நாடார்களே #சேர #சோழ #பாண்டிய வம்சா வழியினர் என்ற உண்மையை முன்னாள் #முதல்வர் #ஜெயலலிதா அவர்கள் உலகிற்கு உரக்க உணர்த்திய நாள் இன்று.

💙💙நாடார் சமுதாயம் 1955 ஆண்டுகளில் முன்னேறிய ஜாதியினர் என்பதற்கான ஆதாரம்💚💚🇮🇳census of India 1951🇮🇳 #நாடார்
16/11/2022

💙💙நாடார் சமுதாயம் 1955 ஆண்டுகளில் முன்னேறிய ஜாதியினர் என்பதற்கான ஆதாரம்💚💚

🇮🇳census of India 1951🇮🇳

#நாடார்

நாடார் சொந்தங்களே1922 ஆம் ஆண்டு, நாடார் வங்கி என ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், இன்று "தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி" என பிரம...
02/09/2022

நாடார் சொந்தங்களே

1922 ஆம் ஆண்டு, நாடார் வங்கி என ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், இன்று "தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி" என பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. பல இன்னல்களை சந்தித்த வங்கி, தற்போது பங்கு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.

வங்கி நாடார்கள் வசமே இருக்கவேண்டும் என விரும்பும் நாடார் சொந்தங்கள், உடனடியாக செயல்படுங்கள்.

"பொது பங்கு வெளியீடு (IPO)"

செப்டம்பர் 5 ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆரம்பித்து
செப்டம்பர் 7 ஆம் தேதி (புதன்கிழமை) முடிவடைகிறது.

ஒரு பங்கு (share) ரூபாய் 500 முதல் 525 வரை இருக்கும்.

ஒருவருக்கு, குறைந்த பட்சம் 28 பங்குகள் வாங்க வேண்டும் (தோராயமாக மொத்தம் ரூபாய் 15,000)

ஒருவர், அதிக பட்சம் 140 பங்குகள் வாங்க முடியும் (தோராயமாக மொத்தம் ரூபாய் 75,000)

உடனடியாக அருகில் இருக்கும் "தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி" கிளை மேலாளரை (manager) அணுகி அதிகபட்ச பங்குகளை வாங்குங்கள்.

பங்குகளை வாங்க வங்கி ஊழியர்கள் மற்றும் மேலாளர் உங்களுக்கு உதவுவார்கள்.

இந்த தகவலை நாடார்களிடம் உடனடியாக பகிருங்கள்.

நன்றி.

--------------------------------------------------------------

Dear Nadar Brothers and Sisters

Nadar pride TMB (TamilNad Merchantile Bank) is going for IPO.

IPO

opens on September 5th
closes on September 7th.

A share value is Rs. 500 to 525

The minimum mandatory purchase is 28 shares (Rs. 15,000 approx. in total) per person.
The maximum allowed purchase is 140 shares (Rs. 75,000 approx. in total) per person.

Please visit the nearby TMB branch immediately. You need to get a DMAT account to purchase shares. The manager and employees of TMB will guide you to get desired shares. Please buy the maximum number of shares.

Please hurry up. Please share this information with Nadars ASAP.

Thanks.

எத்தனையோ நாடார் சமுதாய தலைவர்களை அறிந்திருப்போம், தலைவியை அறிந்ததுண்டா??போஸ்டர்கள் இல்லை, வீண் விளம்பரமோ, மேடை உறுதி மொழ...
07/11/2021

எத்தனையோ நாடார் சமுதாய தலைவர்களை அறிந்திருப்போம், தலைவியை அறிந்ததுண்டா??

போஸ்டர்கள் இல்லை, வீண் விளம்பரமோ, மேடை உறுதி மொழிகளோ இல்லை. ஏன் தலைவர் பதவிக்கு கூட போட்டியில்லை.

ஆனாலும் அவரை தலைவி என்பதே பொருந்தர்ச் சொல்லாகும்.

1960 களின் பிற் பகுதிகளில் சென்னையில் நாடார்கள் தொழில் ரீதியாகவும், சங்கங்கள் மூலமாகவும் காலூன்ற பெரிதும் காரணமானவர் ஒரு பெண்மணி என்றால் நம்ப முடியுமா??

ஆம், 1960 ஆம் ஆண்டு வாக்கில் சென்னை க்கு அப்போதைய திருநெல்வேலி மாவட்டம், கருவந்தா கிராமத்தில் இருந்து கணவருடன் புலம் பெயர்ந்தவரே கனியம்மா பாட்டி, சுரண்டையில் பிறந்து, வளர்ந்த காரணத்தால் திருமணமான பின் பனையேறி கணவர் செய்து வந்த கருப்பட்டி காய்ச்சும் தொழிலை சரி வர கணவருடன் சேர்ந்து செய்ய முடியாததனால் சென்னை க்கு புலம் பெயர்ந்தனர்.

அக்காலங்களில் சென்னை க்கு புலம் பெயர்வதென்பது தென் மாவட்ட மக்களுக்கு அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. எந்த ஒரு அறிமுகமும், முன் அனுபவமும் இல்லை என்றாலும் சென்னை வண்ணராப்பேட்டையில் குடியேறி கடுமையான உழைப்பின் மூலம் நிலை பெற்றவுடன் சுற்று வட்டார கிராமங்களை குறிப்பாக சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த எண்ணற்ற சொந்தங்களை சென்னையில் நிலை நிறுத்தி தொழிலில் முன்னேற செய்து பெரும் பங்காற்றினார் கனியம்மா பாட்டி. அப்போதெல்லாம் சென்னைக்கு ரயில் ஏறும் பல குடும்பங்களின் விலாசம் கனியம்மா பாட்டி வீடு தான்.. உண்ண உணவும், இருப்பிடமும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் வரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வழங்கி வந்தார் கனியம்மா பாட்டி.

நாடார் சங்கங்கள் அவரவர் சார்ந்த ஊர்களின் பெயர்களில் உருவாக்கம் செய்து நாடார்களிடயே பெரும் ஒற்றுமையை வித்திட்டார். தான் வசித்து வந்த பகுதியில் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமலே தனது வீரமிக்க செயல்களாலும், ஆற்றல் மிக்க பேச்சாலும் அனைத்து கட்சி தலைவர்களுக்குமே ஒரு கட்டத்தில் முன் உதாரணமாய் களத்தில் நின்று அனைத்து சமுதாய மக்களுக்கும் பொது பிரச்னைகளை தீர்த்து தனது இயல்பான ஆற்றளால் பெரிதும் போற்றப்பட்டார்.

எண்ணற்ற திருமணங்களை தனது வீட்டில் நடத்தியிருக்கும் பாட்டி, சீமந்தம் கூட செய்ய இயலாத பெண்களுக்கு தன் சொந்த செலவில் தாயாய் நின்று முறைகளை செய்துள்ளார். பெரும்பாலான நாடார் வீட்டு கர்ப்பிணிகளுக்கும் பிரசவம் பார்த்துள்ளார் 1970, 80, 90, 2000 வரை பாட்டி இல்லாத நாடார் வீட்டு திருமணங்களே இல்லை எனலாம். பிறப்பு முதல் இறப்பு வரை எது யார் வீட்டில் நடந்தாலும் கனியம்மா பாட்டியை தான் நாடார் பெருமக்கள் அக்கால கட்டங்களில் நாடினர். நாடார் சமுதாய நலன்களுக்கு நிதி அளிப்பதிலும் முதன்மையாக திகழ்ந்தார்.

பெரும் தொழிலாதிபர்கள் பலர் இன்று பாட்டியின் அரவணைப்பால் உருவாக்கப்பட்டு நம் நாடார் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வண்ணரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவெற்றியூர் பகுதி நாடார்களிடயே தான் வசித்த இந்த சிறு பகுதியில் நாடார்களுக்கும் சரி, பொது மக்களுக்கும் சரி பெரும் தாக்கத்தை எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஏற்படுத்தி இருக்கும் பாட்டியை இந்த தீபாவளியன்று சென்னை தண்டையார்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றது பெருமதிப்பு.

தனது 87 ஆவது வயதில் இன்னும் அதே கம்பீரம், அதே அக்கறை, அதே திருநெல்வேலி மொழி வழக்கு என நாடார் சமுதாய க்ரீடத்தில் மிளிரும் முத்தாய் தெரிந்தார் இந்த வீர நாடாத்தி.

இன்றைய தலைமுறை நாடார் சமுதாய தலைவர்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டிய முதன்மையான பெண்மணி கனியம்மா பாட்டி.

நன்றி

ரா. பார்த்திபன்
திருநெல்வேலி.

செப்15 நாளான இன்று சௌவுந்திர பாண்டிய நாடாரின் 129வது பிறந்தநாள் தினம்திருடர் கூட்டத்தை தனது துப்பாக்கியால் ஒழித்துக்கட்ட...
15/09/2021

செப்15 நாளான இன்று சௌவுந்திர பாண்டிய நாடாரின்
129வது பிறந்தநாள் தினம்

திருடர் கூட்டத்தை தனது துப்பாக்கியால் ஒழித்துக்கட்டிய அச்சம் அகற்றிய அண்ணல்

நான் நாடார்களின் பிரதிநிதி நான் நாடார்களுக்காகவே பேசுவேன் என சட்டசபையில் வீர முழக்கமிட்ட
சுயமரியாதை சுடர்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பேருந்துகளில் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட போது சமூகநீதியை நிலை நாட்டிய சமத்துவ தலைவர்

பாண்டியராஜ புரம் எனும் ஊரையும் சர்க்கரை ஆலையையும் உருவாக்கி பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிய
தொழில்மேதை

உழைப்பால் உயர்ந்த நாடார்களை மேலும் பல துறைகளில் உயர வைப்பதற்காக 1921 ல் தி நாடார் பேங்கை உறுவாக்கிய
பிதாமகன்

மதுரை,இராமநாதபுரம்,என இரண்டு மாவட்டங்களுக்கு ஆட்சி கழக தலைவராக பதவி வகித்த ஒரே
பாண்டியர் குல மன்னன்

நீதிகட்சியின் முதன்மையான தலைவர் 1936 ஆண்டு தன்னை நாடி வந்த முதலமைச்சர் பதவியை தனது நண்பருக்கு விட்டு கொடுத்த
நட்பின் இலக்கணம்

பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்கு நான் வரமாட்டேன் என நாடார்களுக்கு எடுத்துக்கூறி தமிழகத்தில் பல பள்ளிகூடங்கள் உருவாக காரணமாக திகழ்ந்த படித்தமேதை

பல லட்ச ரூபாய் செலவில் உருவாக்கிய மதுபான ஆலையை தனது தாய் கேட்ட அடுத்தவர்கள் குடியை கெடுத்து நாம் வாழ வேண்டுமா? என்ற ஒரே காரணத்திற்காக திறப்பு விழா கூட நடத்தாமல் இழுத்து மூடிய நீதிமான்

சமூகநீதிக்கு உதாரணமாக திகழ்ந்து பெரியாருக்கு தலைவராக விளங்கிய மாமனிதர் பட்டிவீரன்பட்டி சவுந்திரபாண்டியநாடார் அவர்களின் பிறந்தநாள் விழாவை போற்றுவோம் அவர் செய்த சாதனைகளை நாடார் குல வீர இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாடார் மக்கள் FB Page பெருமை அடைகிறது.

Address

Colachel

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nadar Makkal - நாடார் மக்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share