05/03/2026
மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி - தொடக்க விழா
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) இணைந்து நடத்தும் மூன்று நாள் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி, T.J.S. பொறியியல் கல்லூரியில் மிகச்சிறப்பாகத் தொடங்கியது.
T.J.S. கல்விக்குழுமத்தின் தலைவரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு T.J. கோவிந்தராஜன் ஐயா அவர்கள் இவ்விழாவினை முறைப்படி தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
முன்னிலை: T.J.S. பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ. பிரகாஷ் அவர்களின் தலைமையில் விழா இனிதே நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்கள்: T.J.S. கல்விக் குழுமத்தின் இயக்குநர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு விழாவைப் பெருமைப்படுத்தினர்.
பங்கேற்பாளர்கள்: மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடை உரிமையாளர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர் என ஏராளமானோர் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.