04/01/2024
https://www.bbc.com/news/world-asia-67870119
ஜனவரி 2ம் நாள் விடிந்தபோது எனது தொலைபேசியின் பிபிசி பயன்பாட்டில் (ஆப்) ஒரு விமானம் ஜப்பான் டோக்கியோ விமான ஓடு தளத்தில் தீ பிடித்ததாக செய்தி வந்தது. இரண்டு மணி நேரம் கழித்து எல்லோரும் பாதுகாப்பாக வெளியேற்ற பட்டதாக வேறு செய்தி வந்தது, மிகவும் ஆறுதலாக இருந்தது. இது நமக்கு வெகு தூரத்தில் எங்கோ நடந்தது என்று விட்டுவிடாமல், இந்த செய்தியில் இருந்தும்.
3 ஆகஸ் 2016 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து துபாயில் தரை இறங்கிய இ கே 521 விமானம் தீ பற்றிக்கொண்டது, இதில் இருந்த 295 பயணியாற்றும் உரையில் சத்தமின்றி காப்பாற்றப்பட்டனர் என்ற செய்தியிலிருந்தும் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு விமானமும் பறக்கும் தகுதி வாய்ந்தது என்று சான்றளிக்கப்பட அந்த விமானத்தில், அது தரையில் இருக்கும்போது தீ பற்றிக்கொண்டால் அதில் இருக்கும், எல்லா பயணியரும் (1 நிமிடம் 30 வினாடி) 90 வினாடிகளுக்குள் பாதுகாப்பாக வெளியேற இடைவெளியும், வாயில்களும் இருக்க வேண்டும். இது எல்லா அளவு விமானத்திற்கும், பயணியர் எண்ணிக்கைக்கும் பொருந்தும். இந்த 90 நிமிட அளவுகோல், எந்த பயணப்பெட்டியும் இல்லாமல் விமான பயணியாளர்களின் கட்டளைகளுக்கு பணிந்து பயணியர் நடக்கும் போது மட்டுமே இது செயல்முறையாகும்.
இப்பொழுது இரண்டு விபத்துகளுக்கும், இரண்டு வேற்றுமைகள் இருந்தன. ஒன்று டோக்கியோ விபத்து பலமானது துபாய் விபத்து மேலோட்டமானது. டோக்கியோ விபத்தின் அவசரகால வெளியேற்றத்தின்போது பயணியர் விமான பணியாளர்களின் கட்டளைகளை பின்பற்றினார்கள், ஆனால் துபாய் விபத்தில் பயணியர் கட்டளைகளை பின்பற்றவில்லை. ஆனாலும் எல்லோரும் பிழைத்துக்கொண்டார்கள் என்பது தவறான முன்னுதாரணமாகும். இதற்கு அவர்களாவது நல்லூழ் காரணமாக இருக்கலாம். முதல் காரணம் தீயின் வலுத்தன்மை, இதனை எப்போதுமே நமக்கு சாதகமான காரணியாக கொள்ளமுடியாது.
கீழ்ப்படிதல் என்ற பதம் நம் தலைமுறையினரிடையே காணாமல் போய்க்கொண்டிருக்கிற ஒன்றாகும். பெற்றோருக்கும், சான்றோருக்கும், ஆன்றோருக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்த காலம் நமக்கு மறந்து பொய்விட்ட சூழலில், விமான பயணங்களில் விமான பணியாளர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடத்தல் அறம் மட்டுமல்ல சட்டப்படியானதுமாகும். பன்னாட்டு விமான பயண சட்டங்களின் கீழ் அவர்களுக்கு அவசர கால அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற பயணிகளின் பாதுகாப்பு கருதி அத்து மீறும் பயணியரை தடுத்து (கைது) வைத்து தரை இறங்கும் போது அந்த நாட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. விமானத்தில் ஏறும் முன்பு அதிக சினத்துடனோ போதை உணர்வோடோ அல்லது கட்டுப்படுத்த இயலாதவாறு செயல்பட்டாலோ, உங்கள் செலவில் உங்களை விமானத்தில் ஏற்ற மறுக்கவோ அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அவர்கள் அழகாவும் நம்மை பார்த்து வணங்கி நம்மை பார்த்து புன்னகைப்பதை பார்த்து அவர்களை குறைவாக எடை போட்டுவிடக்கூடாது.
நம் பயணப்பெட்டி, அதன் உள்ளடக்கமான நகை கடவுசீட்டு உள்ளிட்ட எல்லாமே காப்பீட்டின் ஊடாக ஈடுசெய்ய தக்கவை தான். ஆனால் நம் உயிரும் நம்மோடு பயணிக்கிற மற்றவர்களின் உயிர் திரும்பப்பெற இயலாதது. முட்டாள் தனமான செயல்களால் தன்னைத்தான் மாய்த்துக்கொள்வதே தவிர்க்கவேண்டியது, அடுத்தவர்களுக்கு அவர்களை காப்பாற்றிக்கொள்ள தாம் செய்யும் மடத்தனம் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது.
எண்ணிப்பார்த்தால், இதே (டோக்கியோ) விபத்து தமிழகம், கேரளம் ஆந்திரா, ஏன் இந்தியாவில் எங்கு நடந்திருந்தாலும் குறைந்தது பாதி பேர் இறந்திருப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். ஏனெனில், நம்மால் கீழ்ப்படியவும் முடியாது, நம் தலைச்சுமையை மறக்கவும் முடியாது!
Leaving valuables behind was a "major factor" behind the evacuation of 379 people as fire engulfed the plane.