17/07/2022
நான் படிக்கிறேன் நீண்ட காலமாய்,ஒரு மதிப்பெண்ணில் போகிறது,இல்லை இரண்டு மதிப்பெண்ணில் போய் விடுகிறது என்று போட்டித்தேர்வில் பலர் வருந்தக்கேட்டிருக்கிறேன்,அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில் சீன மூங்கில் பற்றி,சீன மூங்கில் வளர்க்கும் போது 5 வருடம் வரை சிறிதளவு வளர்ச்சியை கூட பார்க்க முடியாது,ஆனால் 5 அல்லது 6 வது வருடத்தில் தனது வளர்ச்சியை ஆரம்பிக்கும் போது 6 வாரத்தில் 80 அடி உயர வளர்ச்சியை பார்க்கமுடியும்,அந்த வளர்ச்சியானது ஆறு வாரத்தில் வந்த வளர்ச்சி அல்ல,ஆறு வருட காலம் தனக்குள் வளர்ந்து வெளிக்காட்டிய வளர்ச்சி,நாம் படிக்கும் காலம் வெளியே தெரியும் ஆனால் நமது அறிவு வளர்ச்சி நாம் தேர்வில் வெற்றி பெற்ற பின் தான் தெரியும்.வளர்ச்சி இல்லை என்ற பெயரில் மூங்கிலை வெட்டி விட்டால் நஸ்டம் யாருக்கு?அது போல் தேர்வில் வெற்றி இல்லை என்ற பெயரில் படிப்பதை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லுதல் சரியா?அல்லது நம்மை நாம் குறை சொல்லுதல் சரியா?வளர்ச்சி வெளியே தெரியும் வரை போராடுங்கள்,கண்டிப்பாக நாம் தேர்வில் வெற்றி பெறுவோம்,வாழ்வின் இழந்துவிட்டோம் என்று நினைத்த அனைத்தும் மொத்தமாக வெளியே வரும்.எனவே உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள்.
நமது வீட்டில் நாம் பாலை கொதிக்கவைத்திருப்போம்,அது சரியான கொதிநிலை வரும் வரை தன் நிலை மாறாமல் அப்படியே இருக்கும்,கொதிக்கவில்லை என்று நாம் திரும்பி இருக்கும் போது பால் பொங்கி கீழே விழுந்துவிடும்.நாம் பால் கொதிக்கும் முன் பால் அதே நிலையில் இருக்கிறதே என்று பால் கொதிநிலை அடையும் முன் அடுப்பை அணைப்போமா?தேர்வுக்கு படிக்கும் போது சீன மூங்கில் மற்றும் பால் கொதித்தலை மனதில் வையுங்கள்,நமக்கு வாழ்நாள் முழுவதும் வெற்றி தான்.