04/09/2023
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தலைமையில் மினி ஒலிம்பிக்.
2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டி நிகழ்வானது இம்முறை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தலைமையின் கீழ் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதன் ஒரு முக்கிய நிகழ்வான இறுதி போட்டிகளுக்கான தொடக்க விழாவானது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. பி.ப 2.00 மணியளவில் ஆரம்பித்த வரலாற்றுமிகு சிறப்பு நிகழ்விற்கு 2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டிற்கான தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்கள் தலைமை தாங்கியதுடன், பிரதம விருந்தினராக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ;ட பேராசிரியர் சந்தன பி உடவத்த அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார். இந்நிகழ்விற்கு வருகை தரு விருந்தினர்களாக, ஏனைய அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த உபவேந்தர்கள், கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், மாவட்ட பொலிஸ்மா அதிபர், அரச பல்கலைக்கழகங்களின் உடற்கல்விப் பிரிவின் இயக்குனர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டதோடு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் சங்கமம் என இந்நிகழ்வு சிறப்புற்றிருந்தது.
அது மட்டுமல்லாது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பாக பிரதி உபவேந்தர் பேராசிரியர். கே. இ. கருணாகரன், இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு சங்கத்தின் தலைவரும் 2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டிற்கான உபதலைவருமான பேராசிரியர் என். ராஜேஸ்வரன், பல்கலைக்கழக பதிவாளர் திரு. ஏ. பகிரதன் மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டிற்கான செயலாளரும் ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளரும் மற்றும் பல்கலைக்கழகத்தின் உடற்கல்விப் பிரிவின் இயக்குனருமான திரு. எஸ். திபாகரன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர். இது மட்டுமல்லாது பணிப்பாளர்கள், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், சிரேஷ;ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், சிரேஷ;ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள்இ சிரேஷ;ட உப பதிவாளர்கள், உப பதிவாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டி நிகழ்வின் இலட்சினை மற்றும் ஆயளஉழவ ஆகியவற்றின் காட்சிப்படுத்தலுடன், பாடசாலை மாணவர்களின் இசை வாத்தியங்கள் முழங்கிய அணிவகுப்போடு, அனைத்து அரச பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த போட்டியில் பங்கேற்கும் வீர வீராங்கனைகளின் அணிவகுப்புடனும் பிரதம அதிதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா கற்கைகள் நிலையத்தின் மாணவர்களினால் நிகழ்த்தப்பட்ட வரவேற்பு நடன நிகழ்வு மற்றும் கலாச்சார நடனம் ஆகியவை ஒட்டுமொத்த நிகழ்வினையும் மேலும் சிறப்புறச் செய்திருந்தது எனலாம்.
சமூகத்தின் வளர்ச்சிக்கும் நாடளாவிய ரீதியில் விளையாட்டுத்துறையை வளர்ப்பதற்கும் மற்றும் அமைதியான சமூதாயத்தை நாட்டில் உருவாக்குவதற்கும் அனைவரும் ஒன்றுபடுவோம் என்கின்ற தொனிப்பொருளினை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளைப் புறாக்கள் பறக்கவிடப்பட்டதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. மேலும் 2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவானது செப்டெம்பர் 08 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான மைதானத்தில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.