03/09/2025
வெற்றியைக் கொண்டாடுவோம்!
நடைபெற்று முடிந்த தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில், எமது ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரி மகளிர் அணி முதலிடம் (Champion) பெற்று, பெருமைமிகு வெற்றியைப் பெற்றுள்ளனர்.
இது, கல்லூரியின் வரலாற்றில் உடற்பயிற்சி அணி தேசிய மட்டத்தில் சாதனை படைத்த முதலாவது தருணம் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
இந்த சிறப்பான வெற்றியை ஏற்படுத்திய அனைத்து மாணவியருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் என் உளம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்பயிற்சி ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், குறிப்பாக கல்லூரியின் முதன்மைப் பயிற்றுவிப்பாளராகிய திரு. குபேசன் அவர்களுக்கும், எங்கள் கல்லூரி அதிபர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.
இச் சாதனையாளர்களை வாழ்த்தி, பாராட்டிக் கௌரவிப்பது எமது கடமையாகும். எனவே நாளை 04.09.2025 வியாழக்கிழமை காலை 08.00 மணிக்கு, சாதனையாளர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு கல்லூரிச் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகையால், வசதியுள்ள அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பழைய மாணவர் சங்கம்
ஸ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரி