17/04/2021
அஸ்ஸலாமு அலைக்கும் *மதிப்புக்குரியவர்களே* இங்கே இருப்பது ஆபிரிக்க நாட்டில் அல்லது இலங்கையின் மகியங்கனை போன்ற காட்டுப்பகுதியில் மனித நடமாட்டம் இல்லாத ஒரு பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரு பாடசாலை அல்ல. சகல வளங்களும் கொண்ட அக்குறனை மத்தியில் குருகொடையில் அமைந்துள்ள எமது பாடசாலையின் ஆரம்ப பிரிவின் தரம் 3A,3B, 4A, 4B வகுப்பறைகள் ஆகும். கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அறிவின் ஆரம்ப அடிப்படைகளைப் பெற வேண்டி ஒரு வயதில் வெயிலில் வாடி, மழையில் நனைந்து, அடங்கி ஒடுங்கிப் போய் , அறிவின் ஆசையும் ஆர்வமும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டவர்களாய், இந்த நவீன தொழில் நுட்ப உலகத்திலே அடிப்படை வசதிகள் எதுவுமே இன்றி ( உட்கார்ந்திருப்பதற்கு ஒழுங்கான கதிரை மேசை கூட இன்றி) கடந்த 04 வருடங்களாக மாட்டுக்கும் உதவாத இந்த கொட்டிலில் படிக்கவேண்டிய தலைவிதி எமது இந்த மாணவர்களுக்கு என்று ஆகிவிட்டது. பாவம் இந்த மாணவர்களும் அதிலே கற்பிக்கும் ஆசிரியர்களும். மிகக் கடுமையாக சிரமப் படுகிறார்கள். இந்த நிலைமை இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் நீடிக்குமோ தெரியாது............ *மதிப்புக்குரிய பெற்றோர்களே, பழைய மாணவர்களே, தனவந்தர்களே, நலன் விரும்பிகளே* எமது பாடசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக ஒரு மண்டபத்தை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்க மட்டத்தில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம். எனினும் இதுவரை எதுவும் கைகூடவில்லை. என்றாலும் அரசாங்க உதவி கிடைக்கும் வரை காலம் தாழ்த்தாது பாடசாலை SDC மூலமாக இந்த தற்காலிக மண்டபத்தை கட்ட ஆரம்பித்தோம். எனினும் போதிய உதவிகள் கிடைக்காத தன் காரணமாக வேலைகள் இடைநடுவே நின்று விட்டன. மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததன் காரணமாக அரைகுறையாக கட்டப்பட்ட மண்டபத்தில் வகுப்புகளை கடந்த 4 வருட காலமாக நடத்தி வருகின்றோம். இந்த எஞ்சிய வேலைகளை அவசரமாக செய்து முடித்தால்தான் மாணவர்கள் ஒழுங்காக படிப்பார்கள். எனவே இதனை கட்டி முடிப்பதற்கான உங்களால் முடியுமான உதவிகளை, சதகாக்களை இந்த புனித ரமலான் மாதத்தில் பெரு மனதோடு தந்துதவுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். எமது சமூகத்தின் பொருளாதாரம் வேகமாக சரிந்து விழ ஆரம்பித்து விட்டது. மார்க்கத்தை கூட சரியாக செய்ய முடியாத துர்ப்பாக்கியம் நிலவுகின்றது. எஞ்சி இருக்கின்ற ஒன்றே ஒன்று கல்வி மட்டும் தான். எனவே அந்தக் கல்வியை எமது இந்த இளம் சந்ததியினருக்கு முறையாக வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களை தலைநிமிர்ந்தவர்களாக, நாட்டுக்கு பயன் உள்ளவர்களாக வாழ வைக்கலாம். எனவே எமது பாடசாலைக்கான உங்களது உதவிகளையும் ஒத்தாசைகளையும் தொடர்ந்தும் வழங்குமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம். எமது பாடசாலையில் பூர்த்தி செய்யப்படாத குறைகளும் தேவைகளும் எவ்வளவவோ இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் இங்கே நாங்கள் கூற வரவில்லை. குறைந்தது இந்த மண்டப வேலையையாவது பூர்த்தி செய்வதற்கு உதவுவீர்கள் என்று எதிர்பார்ப்போடு உங்களிடம் முன்வைக்கின்றோம். ஜஸாகல்லாஹ் ஹைரா. - அதிபர். S.M.Hamzy. 0760240480 2021.04.15.