22/06/2026
எமது கல்லூரியிலிருந்து 2025ஆம் ஆண்டு கல்வியாண்டில் வெளியேறிய மாணவர்களும், அவர்களது நண்பர்களும் இணைந்து, கல்லூரியின் தேவைகளைக் கருத்திற்கொண்டு ஒரு புதிய ஒலிபெருக்கி (Sound System) தொகுதியை சதகத்துல் ஜாரியாவாக அன்பளிப்புச் செய்துள்ளனர். நீண்டகாலமாக தங்களது மனதில் இருந்த இந்த நற்சிந்தனையை செயல்படுத்தும் முகமாக அவர்கள் வழங்கியுள்ள இந்த பெறுமதிமிக்க அன்பளிப்பு, கல்லூரியின் கல்வி, மார்க்க மற்றும் பொதுநிகழ்ச்சிகளை மேலும் சிறப்பாக நடத்துவதற்கு பெரும் துணையாக அமைகின்றது.
குறித்த ஒலிபெருக்கி தொகுதி, கல்லூரி அதிபர் மற்றும் பிரதியதிபர் அவர்களின் ஊடாக உத்தியோகபூர்வமாக கல்லூரியிடம் கையளிக்கப்பட்டது. மாணவர்கள் தாங்கள் கல்வி கற்ற நிலையத்தின் வளர்ச்சியிலும் தேவைகளிலும் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகின்றார்கள் என்பதற்கு இந்த அன்பளிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தங்களது சொந்த முயற்சியாலும், நண்பர்களின் ஒத்துழைப்பாலும் இந்த நற்செயலை முன்னெடுத்து, கல்லூரிக்கு பயனுள்ள ஒரு நிரந்தரப் பங்களிப்பை வழங்கியுள்ள 2025 ஆம் ஆண்டு வெளியேறிய மாணவர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எமது கல்லூரி சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அல்லாஹுதஆலா அவர்களது இந்த சதகத்துல் ஜாரியாவை ஏற்றுக்கொண்டு, இதன் நன்மைகளை அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வழங்கி, அவர்களது கல்வி, தொழில் மற்றும் வாழ்வில் பரக்கத்தையும் வெற்றியையும் அருள்வானாக. ஆமீன்.
جزاكم الله خيراً
JAMIAH MANARUL HUDHA
college