Tamil Murli

Tamil Murli Murlis are the unadultrated original versions of SHIVBABA our Supreme Teacher,as initially &actually spoken by Him through His medium BrahmaBaba since 1936

25-04-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்இனிமையான குழந்தைகளே! எந்த பழைய தேகம் மற்றும் தேகத்தின் உறவினர்கள் ஒருவரு...
24/04/2022

25-04-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்

இனிமையான குழந்தைகளே! எந்த பழைய தேகம் மற்றும் தேகத்தின் உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் துக்கம் கொடுக்ககூடியவர்களோ, அவர்கள் அனைவரையும் மறந்து ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள், ஸ்ரீமத்படி நடங்கள்.

கேள்வி:
தந்தையுடன் சேர்ந்து வீடு திரும்பிச் செல்வதற்காக தந்தையின் எந்த ஸ்ரீமத்தை பாலனை (கடைபிடிக்க) வேண்டும்?

பதில்:
தந்தையின் ஸ்ரீமத் லி குழந்தைகளே! தூய்மை ஆகுங்கள். ஞானத்தை முழுமையாக தாரணை செய்து தனது கர்மாதீத் நிலையை உருவாக்குங்கள். அப்பொழுதே தந்தையுடன் சேர்ந்து வீடு திரும்பிச் செல்ல இயலும். கர்மாதீத் ஆகவில்லை என்றால், இடையில் நின்று தண்டனைகளை அடைய வேண்டியது இருக்கும். வினாச நேரத்தில் சில ஆத்மாக்கள் சரீரத்தை விட்டுவிட்டு அலைந்து திரியும். உடன் செல்வதற்குப் பதிலாக இங்கேயே முதலில் தண்டனையை அனுபவித்து கணக்கை முடிக்கும். ஆகையினாலே, தந்தையின் ஸ்ரீமத் என்ன வென்றால் குழந்தைகளே! தலை மீது பாவங்களின் சுமை என்ன உள்ளனவோ, பழைய கணக்கு வழக்கு என்ன உள்ளனவோ, அவை அனைத்தையும் யோகபலத்தின் மூலம் சாம்பல் ஆக்குங்கள் என்பதாகும்.

பாடல்:
ஓ! தூரத்து வழிப்போக்கரே.......

ஓம் சாந்தி.
இப்பொழுது பிராமணர்களாகிய உங்களுடைய புத்தியிலிருந்து சர்வவியாபி என்ற ஞானம் நீங்கி விட்டது. பரமபிதா பரமாத்மா பிரஜாபிதா பிரம்மா மூலம் புது உலகைப்படைக் கின்றார் என்பதை நல்ல முறையில் புரிய வைக்கப்படுகிறது. அவர் படைப்பாளர் ஆவார், அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றார். அவர் வருகின்றார், வந்து குழந்தைகளை தன்னுடை யவர்கள் ஆக்குகின்றார் என்பதையும் குழந்தைகள் அறிவீர்கள். மாயையிடமிருந்து விடுவிக் கின்றார். பழைய தேகம், தேக சகிதம் ஒருவருக்கு ஒருவர் துக்கம் கொடுக்கக்கூடிய உற்றார் உறவினர் போன்ற அனைத்தையும் மறக்க வேண்டும். யாராவது வயோதிகர் இருக்கிறார் என்றால் இராமரை நினைவு செய்யுங்கள் என்று அவரது உற்றார் உறவினர் கூறுவர். அது கூட பொய் தான் கூறுகின்றனர். சுயம் அவர்களே அறிந்திருக்கவில்லை, அவர்களுடைய புத்தியில் பரமாத்மாவின் நினைவு தங்குவதில்லை. பரமாத்மா சர்வவியாபி என்று புரிந்திருக்கின்றனர். ஒருபுறம் தூரத்து வழிப்போக்கரே என்று பாடுகின்றனர். ஆத்மாக்கள் தூரத்திலிருந்து வந்து சரீரத்தை தாரணை செய்து அதனதன் நடிப்பை நடிக்கின்றன. மனிதர்களுக்காகவே இந்த அனைத்து விசயங்களும் புரிய வைக்கப்படுகின்றன. மனிதர்கள் சிவன் கோவில் கட்டு கின்றனர். பூஜை செய்கின்றனர். பின்னர் கூட இங்கே அங்கே தேடிக்கொண்டு இருக்கின்றனர். எனக்குள், உங்களுக்குள் மற்றும் அனைத்திலும் வியாபித்திருக்கின்றார் என்று கூறுகின்றனர். தந்தையை அறியாதவர்களை அனாதைகள் என்று கூறுகின்றார். ஹே, பகவான்! என்று நினைவு செய்கின்றனர், ஆனால், அவரை அறியவில்லை. அவர் நிராகாரமாக இருக்கின்றார் என்று புரிந்திருக்கின்றனர். நமது ஆத்மாவும் நிராகாரமானது ஆகும். இது ஆத்மாவின் சரீரம் ஆகும். ஆனால், ஆத்மாவை யாருமே அறியவில்லை. புருவங்களுக்கு நடுவில் ஜொலிக்கக்கூடிய நட்சத்திரம் போல் உள்ளது என்று கூறவும் செய்கின்றனர். ஒருவேளை நட்சத்திரம் போன்றது எனில், பின்னர் இவ்வளவு பெரிய லிங்கத்தை ஏன் செய்கிறீர்கள்? ஆத்மாவில் தான் 84 பிறவி களின் நடிப்பு உள்ளது. இதைக் கூட அறியவில்லை. இங்கே அங்கே தேடி ஏமாற்றத்தை அடைந்து கொண்டு இருக் கின்றனர். அனைவரையும் பகவான் என்று கூறுகின்றனர். பத்ரிநாதரும் பகவான், கிருஷ்ணரும் பகவான், கல்லிலும், முள்ளிலும் கூட பகவான் இருக் கின்றார் என்றால், பின்னர் இவ்வளவு தூரம் தூரமாக ஏன் தேடிச் செல்கின்றனர்? யார் நம்முடைய தேவி தேவதை தர்மத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையோ, அவர்கள் பிராமணன் ஆகமாட்டார்கள், அவர்களுக்கு தாரணையும் ஏற்படாது. அவர்கள் நல்லது, நன்றாக உள்ளது என்று மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகளே! நான் உங்களை உடன் அழைத்துச் செல்வேன் என்று தந்தை கூறுகின்றார். எப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்படி நடந்து முதலில் தூய்மை ஆவீர்களோ, ஞானத்தை தாரணை செய்வீர்களோ, தனது கர்மாதீத நிலையை உருவாக்குவீர்களோ, அப்பொழுதே என்னுடன் இணைந்து வீட்டைச் சென்றடைவீர்கள். இல்லை யேல், நடுவில் நின்று மிகவும் கடுமையான தண்டனையை அடைய வேண்டியது இருக்கும். இறந்த பின் சில ஆத்மாக்கள் அலைந்து திரிகின்றன. சரீரம் கிடைக்கும் வரை அலைந்து திரியும் தண்டணையை அனுபவிக்கும். வினாச நேரத்தில் இங்கே மிகவும் அசுத்தமாகிவிடும். பாவங் களின் சுமை தலை மீது அதிகமாக உள்ளது. அனைவரும் கணக்கு வழக்கை முடித்து தான் ஆகவேண்டும். சில குழந்தைகள் இப்பொழுது வரை கூட நினைவைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை. ஒரு நிமிடம் கூட தந்தையை நினைவு செய்வதில்லை. பாபாவை நினைவு செய்யுங்கள், ஏனெனில், தலை மீது சுமை அதிகம் உள்ளது என்று குழந்தைகளுக்கு அடிக்கடி கூறப்படுகிறது. பரமாத்மா சர்வ வியாபியாக இருக்கின்றார் என்று மனிதர்கள் கூறுகின்றனர். பின்பும் கூட தீர்த்த யாத்திரைக்காக எவ்வளவு அலைகின்றனர்! இந்த அனைத்து சடங்குகளை செய்வதன் மூலம் நமக்கு பரமாத்மாவை சந்திப்பதற்கான வழி கிடைக்கும் என்று நினைக் கின்றனர். தூய்மை அற்றவர்கள், கீழான நிலையிலிருப்பவர்கள் (பிரஷ்டாச்சாரி) என்னை வந்தடைய முடியாது என்று தந்தை கூறுகின்றார். இன்னார் நிர்வாண தாமம் சென்றடைந்து விட்டார் என்று கூறுகின்றனர். ஆனால், பொய் கூறுகின்றனர். எவருமே செல்வதில்லை. பக்தி மார்க்கத்தில் எவ்வளவு ஏமாற்றத்தை அடைகின்றனர் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். இந்த சாஸ்திரங்கள் அனைத்தையும் படித்து படித்து மனிதர்கள் கீழே விழுந்து தான் ஆக வேண்டும். தந்தை உயர்த்துகின்றார், இராவணன் கீழே விழவைக்கின்றது. நீங்கள் எனது வழிப்படி நடந்து தூய்மை ஆனீர்கள் மற்றும் நல்லமுறையில் படித்தீர்கள் என்றால் சொர்க்கம் செல்வீர்கள், இல்லை என்றால், அந்தளவு உயர்ந்த பதவியை அடைய இயலாது என்று இப்பொழுது தந்தை புரிய வைக்கின்றார். எவ்வளவு கண்காட்சி சேவை நடைபெறுகிறது! இப்பொழுது இந்த சேவை அதிகரிக்கும். கிராமம் கிராமமாகச் செல்வீர்கள். இது புதிய படைப்பாகும். புதுப்புது கருத்துகள் (பாய்ண்ட்ஸ்) வெளிப்படுகின்றன. எதுவரை வாழ் கிறோமோ அதுவரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய இலட்சியமே எதிர்காலத் திற்காகத் தான். இந்த சரீரத்தை விட்டுவிட்ட பின் நீங்கள் சென்று இளவரசன், இளவரசி ஆகப்போகிறீர்கள். சொர்க்கம் என்றால் சொர்க்கம் தான். அங்கே நரகத்தின் பெயர் அடையாளம் கூட இருக்காது. பூமி கூட தலைகீழாக மாற்ற மடைந்து புதியதாகிவிடுகிறது. இந்த கட்டிடங்கள் முதலிய அனைத்தும் அழிந்துவிடும். தங்க துவாரகை கீழே சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். கீழே எதுவும் செல்வதில்லை. சக்கரம் சுழல்கிறது. இந்த தீர்த்த யாத்திரை போன்ற அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும். பக்தி என்பது இரவாகும். எப்பொழுது பக்தியின் இரவு முடிவடை கிறதோ அப்பொழுது பகல் ஆக்குவதற்காக பிரம்மா வருகின்றார். துவாபர, கலியுகம் பிரம்மா வின் இரவு ஆகும். பிறகு பகல் வரவேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்குள்ளும் வரிசைக் கிரமமாக உள்ளீர்கள். அனைவரும் ஒன்று போல் கற்க இயலாது. வெவ்வேறு நிலைகள் உள்ளன. கண்காட்சியில் பாருங்கள் எத்தனை பேர் வருகின்றனர். 5-7 ஆயிரம் நபர்கள் தினமும் வருகின்றனர். பின்னர், யார் குழந்தையாக ஆகிறார்கள்? கோடியில் ஒருசிலர், அந்த சிலரிலும் ஒருவர். பாபா, 3-4 பேர் குழந்தைகள் ஆகியிருக்கின்றனர், அவர்கள் தினந்தோறும் வருகின்றனர் என்று எழுதுகின்றனர். சிலர் 7 நாட்கள் பாடம் கேட்கின்றனர், பிறகு, வருவதில்லை. யார் தேவி தேவதை தர்மத்தினராக இருப்பார்களோ அவர்களே இங்கு நிலைத் திருப்பார்கள். சாதாரண ஏழைகளே குழந்தைகள் ஆவார்கள். செல்வந்தர்கள் நிலைப்பது என்பது கடினம். மிகவும் உழைக்க வேண்டியதாக உள்ளது. கடிதம் கூட எழுதுகின்றனர். இரத்தத்தினால் கூட எழுதிக் கொடுக்கின்றனர். பின்னர், போகப்போக மாயை விழுங்கி விடுகிறது. யுத்தம் நடக்கிறது. இராவணன் வென்றுவிடுகிறான். மற்றபடி, ஞானம் கொஞ்சம் கேட்கின்றனர். அதனால், அவர்கள் பிரஜையில் சென்றுவிடுவார்கள். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் என்று பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். மம்மா, பாபா மற்றும் முழு ஈடுபாட்டிலுள்ள குழந்தைகள் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். மகாரதிகளின் பெயர் புகழப்படுகிறது அல்லவா! பாண்டவ சேனையில் யார் யார் இருக்கிறார்களோ, அவர்களுடைய பெயர் புகழப்படுகிறது. எனில், கௌரவ சேனையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பெயரும் புகழப்படுகிறது. ஐரோப்பிய வாசிகள் யாதவர்களின் பெயரும் புகழப்படுகிறது. செய்தித்தாளில் கூட புகழ்வாய்ந்த வர்களின் பெயர் போடப்படுகிறது. பரமபிதா பரமாத்மாவுடன் அவர்கள் அனைவருக்கும் விபரீத (அன்பற்ற) புத்தி உள்ளது. பரமாத்மாவை அறிந்தால் தானே அன்பு செலுத்த முடியும். இங்கே கூட குழந்தைகள் அன்பு செலுத்த இயலுவதில்லை. அடிக்கடி மறந்துவிடுகின்றனர். பிறகு, பதவி கீழானதாக ஆகிவிடுகிறது. எவ்வளவு தந்தையை நினைவு செய்வீர்களோ, அந்தளவு விகர்மங்கள் வினாசம் ஆகும் மற்றும் உயர்ந்த பதவி கிடைக்கும். பிறரையும் தனக்குச் சமமாக ஆக்க வேண்டும். இரக்க உள்ளம் உடையவர் ஆகவேண்டும். கண் இழந்தவர் களுக்குக் கூட ஊன்றுகோல் ஆக வேண்டும். சிலர் கண் இழந்தவர்கள், சிலர் ஒற்றைக் கண் உள்ளவர்கள், சிலர் ஊனமுற்றவர் களாக உள்ளனர். இங்கே கூட குழந்தைகள் வரிசைக்கிரமமாக உள்ளனர். அத்தகையவர்கள் பிறகு சாதாரண பிரஜையில் சென்று வேலைக்காரன் வேலைக்காரி ஆவார்கள். போகப்போக நீங்கள் அனைத்துக் காட்சிகளையும் காண்பீர்கள். ஈஸ்வரனை சர்வ வியாபி என்று கூறுவது அறிவான செயல் அல்ல. ஈஸ்வரனோ ஞானக்கடல் ஆவார். அவரே வந்து உங்களுக்கு ஞானம் அளித்துக் கொண்டு இருக்கின்றார், இராஜயோகமும் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணரது ஆத்மா, யார் இப்பொழுது 84 பிறவிகள் எடுத்து முடித்துவிட்டாரோ, அந்த ஆத்மா இப்பொழுது இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறது. எவ்வளவு ஆழமான விசயங்கள்! இந்த சமயத்தில் அனைவரும் தந்தையை மறந்த காரணத்தினால் அளவில்லாத துக்கம் நிறைந்தவர் கள் ஆகிவிட்டனர். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு முயற்சி செய்வீர்களோ, அவ்வளவு உங்களிட மிருந்து குறைகள் நீங்கிவிடும். குறிக்கோள் மிக உயர்ந்தது ஆகும். கோடிக் கணக்கானோரிலிருந்து முக்கிய மானவர்கள் 8 பேர் வெளிப்படுகின்றனர். பிறகு, 108 மணி மாலை உருவாகிறது. பின்னர், 16 ஆயிரம் உருவாகிறது. இது கூட முயற்சி செய்வ தற்காகவே பயம் ஏற்படுத்தப்படுகிறது. உண்மையில், 16 ஆயிரம் இல்லை. மாலை என்பது 108 மணியினுடையது தான். மேலே மலர், பிறகு ஜோடி மணிகள், வரிசைக்கிரமமாக விஷ்ணு மாலை உருவாகிறது. முயற்சி செய்விப்பதற்காக எவ்வளவு புரிய வைக்கப்படுகிறது! யார் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இல்லையோ, அவர்கள் எதையும் புரிந்து கொள்ளமாட்டார்கள். சொர்க்கத்தின் சுகத்தை அடைவதற்குத் தகுதியானவர்கள் அல்ல. பூஜாரிகள் அனேகர் உள்ளனர், அவர்கள் கூட வருவார்கள் என்றால், பிரஜைகளாகத் தான் வருவார்கள். பிரஜை பதவி என்பது ஒன்றுமே கிடையாது. மம்மா, பாபா என்று கூறுகிறீர்கள் எனில், அவர்களைப் பின்பற்றி மம்மா, பாபாவின் இதய சிம்மாசனதாரி ஆகுங்கள். ஏன் மனம் உடைந்து போகிறீர்கள்? பள்ளியில் பயிலும் ஏதாவது குழந்தை நான் தேர்ச்சி பெறமாட்டேன் என்று கூறினால் இது மந்த புத்தி உடைய குழந்தை என்று அனைவரும் கூறுவார்கள். புத்திசாலி குழந்தைகள் மிகவும் நன்றாகப் படிக்கின்றனர் மற்றும் உயர்ந்த எண்ணில் வருகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சி யில் மிகவும் நன்றாக சேவை செய்ய இயலும். பாபாவிடம் கூட, நான் சேவை செய்வதற்குத் தகுதியானவராக இருக்கிறேனா என்று கேட்கலாம். குழந்தைகளே! இப்பொழுது நீங்கள் அதிகமாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது தகுதியானவர் ஆகவேண்டும் என்று பாபாவால் கூற இயலும். வித்வான்களுக்கு முன் புரிய வைக்கக் கூடியவர் கூட புத்திசாலி யானவராக இருக்க வேண்டும். முதன்முதலில், பகவான் வந்துவிட்டார் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. தூர தேசத்தில் இருப்பவரே வாருங்கள், எங்களை உடன் அழைத்துச் செல்லுங்கள், ஏனெனில், நாங்கள் மிகவும் துக்கம் நிறைந்தவர்களாக இருக்கிறோம் என்று அழைக்கிறார்கள். சத்யுகத்தில் இவ்வளவு மனிதர்கள் இருக்கமாட்டார்கள். அனைத்து ஆத்மாக் களும் முக்திதாமம் சென்றுவிடுவார்கள். அதற்காகவே உலகம் இவ்வளவு பக்தி செய்கிறது. நான் அனைவரையும் அழைத்துச் செல்வேன் என்று தந்தை கூறுகின்றார். நொடியில் முக்தி, ஜீவன்முக்தி கிடைக்கிறது. நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் ஜீவன்முக்தி நிலை அடைவீர்கள். பின்னர், ஜீவன்முக்தியில் கூட பதவி உள்ளது. ஜீவன்முக்தியில் இராஜா, இராணி பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.மம்மா, பாபா மகாராஜா, மகாராணி ஆகின்றனர் எனில், நாம் ஏன் பதவி அடையக்கூடாது! முயற்சி செய்பவர்கள் மறைந்து இருக்க இயலாது. முழு இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தெய்வீக தர்மத்தைச் சேர்ந்தவர்களாக யாரெல்லாம் இருக்கின்றனரோ, அவர்கள் அவசியம் வருவார்கள். மம்மா, பாபா இராஜா, இராணி ஆகின்றார்கள் என்றால், நாமும் கூட ஏன் முயற்சி செய்யக் கூடாது!

பாபா அவ்வப்போது சென்டருக்கு வருகிறேன். இப்பொழுது மகளுக்குத் திருமணம் முடிக்க வேண்டும். யாராவது ஞானி பையனைக் காண்பித்தால் மணம் முடித்து வைப்பேன் என்று பாபாவிற்குக் குழந்தைகள் கடிதம் எழுதுகின்றனர். நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று பெண் சொல்ல வேண்டும். அனேகப் பெண்கள் அடி வாங்குகிறார்கள். அபலைகள் மீது கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. தாய், தந்தை மற்றும் குழந்தைகள் ஆகிய மூவருமே பாபாவிடம் வந்தீர்கள் என்றால், பாபா புரிய வைப்பார் என்று பாபா எழுதுகின்றார். மதிப்பிற்குரிய பிதாஸ்ரீ என்று எழுதுகிறீர்கள், எனவே, வாருங்கள். டிக்கட் எடுப்பதற்குப் பணம் இல்லை என்றாலும் கூட கிடைத்துவிடும். எதிரில் வரும்பொழுது ஸ்ரீமத் கிடைக்கும். குமாரியை வதைக்கக் கூடாது அல்லவா. இல்லையெனில், பாவ ஆத்மா ஆகிவிடுவீர்கள். தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து தூய்மை ஆகவேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஜீவன் முக்தி பதவியை அடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும். எவ்வாறு தாய், தந்தை மகாராஜா, மகாராணி ஆகின்றார்களோ, அவ்வாறு அவர்களைப் பின்பற்றி சிம்மாசனதாரி ஆகவேண்டும். புத்திசாலி ஆகி படிப்பை நல்லமுறையில் படிக்க வேண்டும்.

2. தந்தையிடம் உண்மையான அன்பு செலுத்த வேண்டும். இரக்க உள்ளம் உடையவர்கள் ஆகி கண் இழந்தவர்களுக்கு வழி காண்பிக்க வேண்டும். தந்தைக்கு எதிரில் வந்து ஸ்ரீமத் பெற்று பாவ ஆத்மா ஆவதிலிருந்து தப்பிக்க வேண்டும் மற்றும் காப்பாற்ற வேண்டும்.

வரதானம்:
மாயா அல்லது இயற்கையின் பலவித கார்ட்டூன் காட்சிகளை சாட்சியாகிப் பார்க்கக் கூடிய சந்தோஷி (திருப்தியான) ஆத்மா ஆகுக.

சங்கமயுகத்தில் பாப்தாதாவின் விசேச கொடை திருப்தி ஆகும். திருப்தியான (சந்தோஷி) ஆத்மாவுக்கு முன்னால், அசைக்கக் கூடிய எந்த ஒரு பரிஸ்திதியும் அந்த மாதிரி அனுபவ மாகும் - பொம்மலாட்டம் போல. இப்போது கார்ட்டூன் காட்சி ஒரு ஃபேசனாக உள்ளது. எப்போதாவது எந்த ஒரு பரிஸ்திதி வந்தாலும் அதை அந்த மாதிரி புரிந்து கொள்ளுங்கள் – எல்லையற்ற திரையில் கார்ட்டூன் காட்சி அல்லது பொம்மலாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாயா அல்லது இயற்கையின் காட்சி இது. இதை சாட்சி ஸ்திதியில் நிலைத்திருந்து தனது பெருமிதத்தில் இருந்து கொண்டு, திருப்தியின் சொரூபத்தில் பார்த்துக் கொண்டிருங்கள் - அப்போது சந்தோஷி (திருப்தியான) ஆத்மா எனச் சொல்வார்கள்.

சுலோகன்:
எந்த விதமான குறையிலிருந்தும் அப்பாற்பட்டு இருப்பது தான் முழுமையானவர் (பர்ஃபெக்ட்) ஆவதாகும்.

மாதேஸ்வரி அவர்களின் விலைமதிக்க முடியாத மகாவாக்கியம்: பரமாத்மாவின் உண்மையான குழந்தை ஆன பிறகு எந்த ஒரு சந்தேகத்திலும் வரக் கூடாது.

பகவான் வாக்கு: குழந்தைகளுக்காக. எப்போது பரமாத்மா தாமே இந்த சிருஷ்டியின் மீது இறங்கி வந்துள்ளாரோ, அப்போது அந்தப் பரமாத்மாவுக்கு நாம் பக்காவாகக் கை கொடுக்க வேண்டும். ஆனால் பக்கா உண்மையான குழந்தை தான் பாபாவுக்குக் கை கொடுக்க முடியும். இந்த பாபாவின் கையை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது. விட்டு விட்டால் பிறகு அநாதை யாகி (ஆதரவற்ற நிலையில்) எங்கே செல்வீர்கள்? பரமாத்மாவின் கையைப் பிடித்துக் கொண்டீர்கள் என்றால் பிறகு சூட்சுமத்தில் இந்த சங்கல்பம் வரக் கூடாது - அதாவது நான் விட்டு விடுவேன் அல்லது சந்தேகம் எதுவும் வரக் கூடாது. நாம் கடந்து செல்வோமா இல்லையா, தெரியவில்லையே - யாராவது அந்த மாதிரியும் குழந்தைகள் உள்ளனர் - தந்தையை அறியாத காரணத்தால் தந்தையையே கூட எதிர்க்கிறார்கள். மேலும் இப்படியும் சொல்லி விடுகிறார்கள் - யாரையும் நான் பொருட்படுத்த மாட்டேன். அத்தகைய சிந்தனை வருமானால் அப்படிப்பட்ட தகுதியற்ற குழந்தையைத் தந்தை எப்படிப் பராமரிப்பார்? பிறகோ கீழே விழுந்தே விட்டீர்கள் எனப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் மாயாவோ வீழ்த்துவதற்கு மிகவும் முயற்சி செய்யும். ஏனென்றால் அவசியம் சோதனை செய்யும் - எந்த அளவுக்கு இவர் போராடக்கூடிய யுத்த வீரர், பயில்வானாக இருக்கிறார் என்று பார்க்கலாம். இப்போது இதுவும் அவசியம் - எவ்வளவுக்கெவ்வளவு நாம் பிரபுவோடு கூடவே கடும் போர்வீரராக ஆகிக் கொண்டே போகிறோமோ, அவ்வளவுக்கு மாயாவும் ருஸ்தம் ஆகி நம்மை வீழ்த்துவதற்கு முயற்சி செய்யும். எந்த அளவு பிரபு பலவானாக உள்ளாரோ, அந்த அளவு மாயாவும் தனது பலத்தைக் காட்டும், ஜோடி முழுமையாக உருவாகும். ஆனால் தனக்கோ பக்கா நிச்சயம் உள்ளது - கடைசியில் பரமாத்மா மகான் பலவான், இறுதியில் அவருக்குத் தான் வெற்றி. சுவாச-சுவாசத்திலும் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும். மாயா தனது பலத்தைக் காட்டும். ஆனால் நாம் மாயாபதி பாபாவின் கையை விடக் கூடாது. அந்தக் கையை முழுமை யாகப் பற்றிக் கொண்டால் நமக்கு வெற்றி. பரமாத்மா நம்முடைய எஜமானர் எனும் போது அவரது கையை விடுவதற்கான சங்கல்பம் கூட வரக்கூடாது. கையை விட்டு விட்டால் பெரிய மூர்க்கர் என்றாகி விடும். அதனால் பரமாத்மா சொல்கிறார் - குழந்தைகளே, நான் சுயம் சக்திசாலி, எனவே எனது துணையில் இருப்பீர்களானால் சக்திசாலியாக அவசியம் ஆவீர்கள். புரிந்ததா குழந்தைகளே? நல்லது. ஓம் சாந்தி.

24.04.22    காலை முரளி            ஓம் சாந்தி   31.03.90      பாப்தாதா,   மதுபன்கருணை மனம் மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட ...
24/04/2022

24.04.22 காலை முரளி ஓம் சாந்தி 31.03.90 பாப்தாதா, மதுபன்

கருணை மனம் மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வு

இன்று அன்பு நிறைந்த மற்றும் கருணை நிறைந்த பாப்தாதா தனக்கு சமமாக குழந்தை களை பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்று பாப்தாதா உலகத்திலுள்ள அறிமுகம் இல்லாத (பாபாவை பற்றிய) குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னை (சிவபாபா) பற்றி தெரியாமல் இருக்கலாம், ஆனாலும் என்னுடைய குழந்தைகள் அல்லவா! பாப்தாதா (தந்தை மற்றும் மூத்த சகோதரன்) என்ற தொடர்பின் மூலம் அனைத்து குழந்தைகளையும் பார்த்துக் கொண்டே பலதரப்பட்ட ஆத்மாக்களுக்கு நேரத்திற்கு தகுந்தாற் போல் ஏதாவதொரு காரணத் தினால் தெரிந்தோ - தெரியாமலோ தற்சமயத்தில் கருணை அதாவது இரக்கத்தின், அவசியம் தேவைப்படுகிறது, மேலும் அவசியத்தின் காரணத்தினால் தான் கருணையின் உருவமான பாபாவை நினைவு செய்கிறார்கள் என்பதை அனுபவம் செய்துக் கொண்டேயிருக்கிறீர்கள். எனவே நாலா பக்கத்திலுமுள்ள அவசியத்திற்கேற்றாற் போல் இந்த நேரத்தில் கருணை நிறைந்த பார்வையை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் முதலாவது வித விதமான பிரச்சனைகளின் காரணத்தினால் தனது மனம் மற்றும் புத்தியின் சமநிலை இல்லாத காரணத் தினால் கருணை நிறைந்த தந்தையை மற்றும் அவரவர்களது இஷ்ட தேவதைகளை கருணை வேண்டி பலர் துக்கத்தோடு குழப்பத்தில் கூக்குரல் இட்டு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அறியாமையில் இருக்கும் ஆத்மாக்கள் பாபாவை பற்றி தெரிந்துக் கொள்ளாத காரணத்தினால் அவரவர்களின் தர்ம பிதாக்களை மற்றும் குரு மார்களையும் மற்றும் இஷ்ட தேவதை களையும் கருணை நிறைந்தவர்கள் எனப் புரிந்துக் கொண்டு கூக்குரல் இடுகிறார்கள். ஆனால் இந்த ஒரே ஒரு பரம ஆத்மாவான நமது தந்தையை தவிர வேறு யாராலும் இரக்கம் கிடைக்காது என்பதை நீங்கள் அனைவருமே தெரிந்துள்ளீர்கள். பாபா அவர்களுடைய (பக்தர்கள்) ஆசைகளை நிறைவேற்றுவதற்கான காரணம் பாவணையின் பலனை கொடுப் பதற்கான காரணம் ஏதாவதொரு இஷ்ட தேவதையை மற்றும் மகான் ஆத்மாவை நிமித்தமாக (கருவியாக) ஆக்கி விடுகிறது, ஆனால் வள்ளலானவர் ஒருவர் தான் - ஆகையால் தற்சமயத் திற்கு ஏற்றாற்போல் கருணை கடலான தந்தை குழந்தைகளுக்கும் சொல்கிறார் - பாபாவின் உதவி செய்யும் துணை கைகள் பிராமண குழந்தைகளாகிய நீங்கள் தான் ஆவீர்கள். யாருக்கு எந்த பொருள் அவசியமாக இருக்கிறதோ, அவர்களுக்கு அது கொடுத்தவுடன் மகிழ்ச்சியடைந்து விடுகிறார்கள். எனவே மாஸ்டர் கருணை நிறைந்தவர் ஆகிவிட்டீர்களா? உங்களுடைய சகோதர - சகோதரிகளாக தான் இருக்கிறார்கள், உடன் பிறந்த சகோதரனாகவோ, அல்லது உடன் பிறவா சகோதரனாக இருக்கலாம், ஆனால் நமது குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தனது குடும்பத்தை சேர்ந்த தந்தையை பற்றி அறியாத, குழப்பத்திலுள்ள ஆத்மாக்களின் மீது கருனை மனமுடையவர் ஆகுங்கள். மனதார கருணை காட்டுங்கள். உலகத்திலுள்ள அறியாமல் இருக்கும் ஆத்மாக்கள் மீதும் கருணை காட்டுங்கள். மேலும் அதனோடு பிராமண குடும்பத்தின் முயற்சியாளர்களின் தீவிர முயற்சி செய்வதற்காக மற்றும் சுய முன்னேற்றத் திற்காகவும் கருணை மனமுடையவர் ஆவது அவசியம் ஆகிறது. சுய முன்னேற்றத்திற்காக தன் மீது கருணை யுடையவராக ஆகும் பொழுது கருணை மனமுடைய ஆத்மாவை சதா எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வு இயல்பாகவே வரும். நான் எத்தனை பெரிய உயர்ந்ததிலும் உயர்ந்த பாபாவின் அதே ஆத்மாவாக இருக்கிறேன், மேலும் அதே போன்று தந்தையை போன்று ஆவதற்கான இலட்சியம் உடையவன் என்று தன்மீதும் கருணைக் கொள்ளுங்கள். அதன்படி ஒருவேளை உண்மையான சிரேஷ்ட சுபாவம் மற்றும் சன்ஸ்காரத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால் தன்மீது தானே இதய பூர்வமாக கருணை நிறைந்தவராகி குறைபாடுகளிலிருந்து வைராக்கியத்தை ஏற்படுத்தும்.

அனைத்து குழந்தைகளும் ஞானத்திலும் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்கள் என்பதை பாப்தாதா இன்று இதைப் பற்றிய ஆன்மீக உரையாடல் செய்துக் கொண்டிருந்தார். புள்ளி சொரூபம் ஆகிவிட்டீர்கள் ஆனால் ஒவ்வொரு பலவீனத்தையும் தெரிந்துக் கொள்வதற்கான கருத்துக்கள் இருக்கிறது. இவ்வாறு நடந்திருக்க வேண்டும், இது செய்திருக்க கூடாது என்பதை தெரிந்திருந்தாலும் கூட புள்ளி சொரூபம் ஆவது மேலும் என்னவெல்லாம் வீணானது பார்ப்பது-கேட்பது மற்றும் தன் மூலம் ஏற்பட்டதை முற்றுப்புள்ளி வைப்பதற்கான புள்ளி வைக்க வருவதில்லையா. ஞான கருத்துக்கள் இருக்கிறது, ஆனால் புள்ளி சொரூபம் ஆவதற் காக விசேஷமாக என்ன அவசியம் இருக்கிறது? தன் மீது இரக்கம் மேலும் மற்றவர்களின் மீது இரக்கம். பக்தி மார்க்கத்திலும் கூட உண்மையான பக்தர்களும் இருப்பார்கள், மற்றும் நீங்களும் உண்மையான பக்தர்களாக ஆகிவிட்டீர்களா, ஆத்மாவில் பதிவுகள் நிரம்பி இருக்கிறதல்லவா. எனவே உண்மையான பக்தர்கள் சதா கருணை மனமுடையவர்களாக இருக்கிறார்கள், ஆகையால் அவர்கள் பாவ கர்மத்தினை பார்த்து பயப்படுகிறார்கள். பாபாவிடம் பயப்படுவ தில்லை. ஆனால் பாவத்திடம் இல்லை. அதனால் தான் பாவ கர்மத்திலிருந்து விடுபட்டு இருக் கிறார்கள். எனவே ஞான மார்க்கத்திலும் யார் உண்மையான கருணை மனமுடையவர்களாக இருக்கிறார்களோ - அதில் 3 விஷயங்களிலிருந்து விலகியிருப்பதற்கான சக்தி இருக்கிறது. யாரிடத்தில் கருணை இல்லையோ அவர்கள் புரிந்துக் கொண்டிருந்தாலும், தெரிந்துக் கொண்டிருந்தாலும் கூட 3 விஷயங்களில் வசப்பட்டு விடுகிறார்கள். அந்த மூன்று விஷயங்கள் - கவனகுறைவு, பொறாமை மற்றும் வெறுப்பு. ஏதாவது பலவீனம் மற்றும் குறைபாட்டின் காரணத்தினால் தான் மூன்று விஷயங்கள் ஏற்படுகிறது. மேலும் யார் கருணை மனமுடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் பாபாவின் துணையாக இருப்பவர்கள், தர்மராஜாவின் தண்டனையிலிருந்து தவிப்பதற்கான நல்ல விருப்பம் வைக் கிறார்கள். பயத்தின் காரணமாக பக்தர்கள் கவன குறைவாக இருப்பதில்லை. அதுபோல பிரமாண ஆத்மாக்களும் பாபாவின் அன்பின் காரணமாக, தர்மராஜாபுரியை கடக்க வேண்டியிருக்காது - இந்த இனிமையான பயத்தினால் (மரியாதையின்) கவனக்குறைவாக இருப்பதில்லை. பாபாவின் அன்பு அதிலிருந்து (தர்மராஜாபுரி) விலக்கி விடுகிறது. தனது மனதின் கருணை கவனக்குறைவை சமாப்தி (முடித்து) செய்து விடுகிறது. மேலும் தனக்காக இரக்க உணர்வு வருகிறது எனவே உள்ளுணர்வு மற்றும் நினைவு எப்படி இருக்கிறதோ, அதுபோன்றே அனைத்து பிராமணர்களும் உலகத்திற்காக தானாகவே இரக்க மனமுடையவர் ஆகிறார்கள். இது தான் யதார்த்தமான ஞானம் நிறைந்த கருணையாகும். ஞானம் இல்லாத கருணை நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் ஞானம் நிறைந்த கருணை ஒருபொழுதும் எந்த ஆத்மாவின் மீதும் பொறாமை அல்லது வெறுப்பின் உணர்வு மனதில் உருவாகாது. ஞானம் நிறைந்த கருணையின் கூடவே தன்னுடைய ஆன்மீகத் தன்மையின் நறுமணம் அவசியம் இருக்கிறது. கருணை என்பது தனிப்பட்டு இருக்காது, ஆனால் கருணை மற்றும் ஆன்மீகத்தன்மை இரண்டும் சமநிலையில் இருக்கிறது. ஒருவேளை ஞானம் நிறைந்த கருணையாக இல்லாமல், சாதரண கருணையாக இருந்தால் ஏதாவது ஆத்மாவின் மீது பற்றுதல் ரூபத்திலோ, ஏதாவதொரு பலவீனத்தினால் அவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்துகிறது. பிராபாவம் (தாக்கம் - பாதிப்பு) ஏற்படுத்தக்கூடாது. வெறுப்பும் ஏற்படக்கூடாது, தாக்கம் ஏற்படுத்தக் கூடாது. ஏனெனில் நீங்கள் மனம், புத்தி உட்பட அனைத்தையும் பாபாவின் மீது அர்ப்பணம் செய்துள்ளீர்கள். மனம் மற்றும் புத்தி உயர்ந்ததிலும் உயர்ந்தவர் மீது ஒருபக்கம் இருக்கும் பொழுது, மற்றவர்கள் மீது எப்படி தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஒருவேளை மற்றவர்களின் பக்கம் தாக்கப்படுகிறீர்கள் என்றால் அவர்களை என்னவென்று சொல்வது? கொடுக்கப்பட்ட (தானம் செய்த) பொருளை மீண்டும் தனக்காக பயன்படுத்துவது - அடமானம் வைக்கப்பட்ட பொருளை களவாடுவது (திருடுவது) என்று சொல்லப்படுகிறது. மனம் புத்தியை கொடுத்து விட்ட பிறகு உங்களுக்கு யாரிடத்தில் தாக்கம் ஏற்படுகிறது? பாபாவிடம் ஒப்படைத்து விட்டீர்களா? பாதி அளவு கொடுத்து விட்டு, மீதி முள்ளவைகளை வைத்திருக்கிறீர்களா? யார் அனைத்தையும் முழுவதுமாக கொடுத்து விட்டீர்களோ, அவர்கள் கையை உயர்த்துங்கள். பிராமண வாழ்க்கையின் அஸ்திவாரத்தின் மகாமந்திரம் என்னவாக இருக்கிறது? மன்மனாபவ. எனவே மன்மனாபவ (மனதினால் பாபாவை நினைவு செய்வது) ஆக உள்ளீர்களா? எனவே ஞானம் நிறைந்த ஆத்மா கருணை மனமுடைய ஆத்மா ஒருபொழுதும் யார் மீதோ, குணங்களின் மீதோ, சேவையின் மீதோ, எந்தவிதத்திலும் தாக்கம் ஏற்படுத்த முடியாது. ஏனெனில் எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கியம் இருக்கும் காரணத்தினால் பாபாவின் அன்பு, உதவியின் கூடவே - இதைத் தவிர வேறு எதுவும் தென்படாது. புத்தியில் வரவே வராது. உங்களுடன்தான் எழுந்திருப்பேன், உங்களுடன்தான் உறங்குவேன், உங்களுடன் தான் சாப்பிடுவேன், உங்களுடன்தான் சேவை செய்வேன், உங்களுடன் தான் கர்மயோகியாக இருப்பேன், - அப்படிப்பட்ட ஆத்மாவிற்கு இந்த நினைவு சதா இருக்கும். ஏதாவது சிரேஷ்ட ஆத்மாவின் மூலம் சகயோகம் (உதவி) கிடைக்கவும் செய்யும், ஆனால் அவர்களுடைய வள்ளல் யாராக இருக்கிறார்? எனவே ஒரு பாபாவின் பக்கம் தான் புத்தி செல்கிறதல்லவா. உதவியை பெற்றுக் கொள்ளுங்கள், ஆனால் வள்ளல் யாராக இருக்கிறார், இதை மறந்து விட வேண்டாம். ஸ்ரீமத் ஒரு பாபாவினுடையதாகும். ஏதோ ஒரு ஆத்மா உங்களுக்கு நிமித்தமாக (கருவியாக) இருந்து பாபாவின் ஸ்ரீமத்தை நினைவு படுத்து கிறார்கள். எனவே அவர்களுடைய (நிமித்தமானவரின்) ஸ்ரீமத் கிடையாது. ஆனால் பாபாவின் ஸ்ரீமத்தை பின்பற்றி மற்றவர்களையும் கூட செய்ய வைப்பதற்காக நினைவு படுத்துகிறார்கள். நிமித்த ஆத்மாக்கள், சிரேஷ்டமான ஆத்மாக்கள் ஒருபொழுதும் எனது வழிப்படி நடக்க வேண்டுமென்று சொல்லமாட்டார்கள். நான் சொல்வது தான் ஸ்ரீமத் என்று சொல்ல மாட்டார்கள். ஸ்ரீமத்தை திரும்பவும் நினைவுப்படுத்துவது, இதைத் தான் யதார்த்தமான சகயோகம் பெறுவது, சகயோகம் கொடுப்பது என்பதாகும். தாதி, தாதியின் ஸ்ரீமத் கொடுப்ப தில்லை. நிமித்தமாக இருக்கிறார்கள், ஸ்ரீமத்தின் சக்தி நினைவை ஏற்படுத்துகிறது. ஆகையால் எந்த ஆத்மாவின் மீதும் பிரபாவம் (தாக்கம்) ஏற்படாது. ஒருவேளை ஏதாவது விஷயத்தில் யார் மீதாவது பிரபாவம் ஏற்படுகிறது என்றால், அவர்களுடைய பெயரின் மகிமையில், உருவத்தில் அல்லது ஏதாவது விசேஷத்தன்மையில் பற்றுதலின் காரணத்தினால், பிரபாவத்தில் இருக்கும் காரணத்தினால் புத்தி எங்காவது சிக்கிக் கொள்கிறது. ஒருவேளை புத்தி மாட்டிக் கொள்கிறது என்றால் பறக்கும் கலையில் செல்ல முடியாது. தன் மீதே தானேயான பிரபாவம் ஏற்படுகிறது - எனக்கு மிகவும் நல்ல திட்டம் தீட்டக்கூடிய புத்தி இருக்கிறது, என்னுடைய ஞானம் மிகவும் தெளிவாக இருக்கிறது, என்னை போன்ற சேவை வேறு யாராலும் செய்ய முடியாது. எனக்கு கண்டுபிடிக்கும் புத்தி இருக்கிறது, குணம் நிறைந்தவனாக இருக் கிறேன் - இது தன் மீதும் கூட தாக்கம் ஏற்படுத்தக் கூடாது. விசேஷத்தன்மை இருக்கிறது, திட்டம் தீட்டக் கூடிய புத்தியிருக்கிறது, ஆனால் சேவையின் நிமித்தமாக யார் மாற்றியது? சேவை என்றால் என்ன என்பதை தெரிந்திருந்தோமா என்ன? ஆகையால் சுய முன்னேற்றத் திற்காக யதார்த்தமான ஞானம் நிறைந்த கருணை மனமுடையவர் ஆவது மிகவும் அவசியமாகும். இதன் பிறகு வெறுப்பு, பொறாமை முடிந்து போய்விடும். தீவிர வேகம் இல்லாமல் இருப்பதற்கான காரணம் - பொறாமை அல்லது வெறுப்பு மற்றும் பிரபாவத்தினால் தான் இருக்கிறது. தன் மீதோ, மற்றவர்கள் மீதோ நான்காவது விஷயம் கவனக்குறைவு சொல்லப்படுகிறது. இது நடக்கத் தான் செய்யும், நேரத்தில் தயார் ஆகிவிடுவார்கள். இது தான் அலட்சியத்தன்மையாகும். பாப்தாதா நகைசுவையாக ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். பிராமண ஆத்மாக்களுக்கு தொலை நோக்கு பார்வை மிகவும் கூர்மையாக இருக்கிறது. ஆனால் அருகாமையில் இருப்பதை பார்க்கும் பார்வை குறைபாடுடன் இருக்கிறது, ஆகையால் மற்றவர் களின் குறைகள் வெகுவாக தென்படுகிறது. மேலும் தனது குறைபாடுகள் தாமதமாக தான் தென்படுகிறது.

எனவே இரக்கத்தின் உணர்வு அனபு நிறைந்ததாகவும் கருணை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். இதனால் மனதினால் வைராக்கியம் வரும். எந்த நேரத்தில் கேட்கிறீர்களோ, பட்டியில் இருக்கிறீர்களோ, ஆன்மீக உரையாடல் செய்கிறீர்களோ, அந்த நேரத்தில் அப்படித்தான் செய்ய வேண்டுமென்று அனைவரும் புரிந்துக் கொள் கிறார்கள். அவர்களுக்கு (உலகத்தினர்) குறுகிய காலத்தின் வைராக்கியம் வருகிறது, மனதளவில் வருவதில்லை. எது பாபாவிற்கு பிடிப்பதில்லையோ, அதில் மனதிலிருந்து வைராக்கியம் வரவேண்டும். தனக்கே பிடிப்பதில்லை, ஆனால் எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வை உழவு செய்யுங்கள், கருணை மனமுடையவராக ஆகுங்கள். பல குழந்தைகள் மிகவும் நல்ல-நல்ல விஷயங்களை சொல்கிறார்கள். யாராவது பொய் பேசும் பொழுது மிகவும் கோபம் வருகிறது என்று சொல் கிறார்கள். பொய்யின் மீது கோபம் வருகிறதா, அல்லது யாராவது தவறு செய்கிறார்கள் என்றால் கோபம் வருகிறதா. கோபம் வருகிறது அப்படியல்ல. அவர்கள் பொய் பேசினார்கள் என்பது சரிதான், அவர்களை தவறாக புரிந்துள்ளீர்கள் மேலும் நீங்கள் கோபம் கொண்டீர்கள் அது சரியானதா என்ன? தவறானவர்கள், தவறானவர்கள் என்று புரிந்துக் கொள்ள முடியும்? அதற்கான விளைவை எப்படி ஏற்படுத்த முடியும். அதன் மீது தனது தவறை பார்ப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் சொல்லும் சிறிய பொய்யான விஷயத்தையும் பெரிதுப் படுத்திவிடு கிறீர்கள். அப்படி நேரத்தில் இரக்க மனமுடையவர் ஆகுங்கள். தனக்கு கிடைத்துள்ள பாபாவின் சக்திகள் மூலம் இரக்க மனமுடையவர் ஆகுங்கள், உதவி அளியுங்கள். அவர்களை பொய் பேசுவதிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்ற நல்ல இலட்சியம் வைக்கிறீர்கள். இலட்சியம் நன்றாக இருக்கிறது, அதற்கான வாழ்த்துக்கள். ஆனால் ரிசல்ட் (முடிவு) என்னவாக இருந்தது? அவர்களும் தோற்று போனார்கள், நீங்களும் தோற்று போனீர்கள். எனவே தோற்று போனவர்கள் தோற்று போனவர்களை தேர்ச்சி பெற செய்வார்களா என்ன? ஆனாலும் அவர்களை நல்லவர்களாக மாற்றுவது, முன்னேற்றுவது - எங்களுடைய பொறுப்பாக இருக்கிறது என்று பலர் புரிந்துக் கொள்கிறார்கள் ஆனால் பொறுப்பை சரியாக செய்ய வேண்டுமென்று நினைப் பவர்கள் முதலில் தனது பொறுப்பை அந்த நேரத்தில் சரியாக செய்தால் தான், மற்றவர் களையும் பொறுப்பாக இருக்க வேண்டுமென்று சொல்ல முடியும். பலர் நிமித்தமான ஆசிரியர் களாக இருப்பதால் சிறியவர்களுக்கு நாம் தான் பொறுப்பு. இவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும், கற்று தர வேண்டுமென்று புரிந்துக் கொள்கிறார்கள். ஆனால் சரியான ஞானம் என்பது தான் ஆத்மாவின் வருமானமாகும் என்பதை எப்பொழுதும் சிந்தனை செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் ஆசிரியர் என்ற பொறுப்போடு அறிவுரை வழங்குகிறீர்கள் என்றால் அந்த அறிவுரையின் மூலம் மற்றவர்களுக்கு வருமானம் சேமிப்பு ஆனதா? என்பதை முதலில் பாருங்கள். ஆத்மாவிற்கு வருமானம் ஏற்பட்டதா? அல்லது ஆத்மாவின் வருமானத்தில் சரிவு ஏற்பட்டதா? ஆகையால் திரிகாலதரிசி (மூன்று காலங்கள் உணர்ந்த) நிலையில் நிலைத்திருந்து எந்தவொரு காரியத்தையும் செய்யுங்கள் என்று பாப்தாதா சொல்கிறார். இவர்கள் செய்தார்கள், அதனால் சொன்னேன் என்று நிகழ்காலத்தை மட்டும் பார்க்காதீர்கள். ஆனால் அவர்களின் எதிர்காலம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை பார்த்தீர்களா? எது முதலில் ஆதி அனாதி (முதலும் முடிவும் இல்லாத) மனநிலை பிராமண ஆத்மாக்களுக்கு இருந்தது, இப்பொழுதும் இருக்கிறது, மேலும் இருக்கவும் செய்யும். அதன்படி இருக்கிறதா? மூன்று காலங்களையும் சோதனை செய்யுங்கள், எனவே பாப்தாதா என்ன விரும்புகிறார் என்பதை புரிந்துக் கொண்டீர்களா?

சுய முன்னேற்றம் செய்கிறீர்கள் ஆனால் மாற்றம் என்ன கொண்டு வந்தீர்கள்? மகாரதியாக இருக்கலாம், புதியவர்களாக இருக்கலாம் - பாப்தாதாவின் ஒரு நல்ல ஆசை இருக்கிறது, எந்தளவு விரும்புகிறார்களோ, அந்தளவு இப்பொழுது நடைபெறவில்லை. ரிசல்ட்டை சொல்வீர்கள் அல்லவா. பாப்தாதா குறுகிய காலத்தின் வைராக்கியத்தை விரும்புவதில்லை. உண்மையான வைராக்கியம் என்பது - பாபாவிற்கு எது பிடிப்பதில்லையோ, அதை செய்யாமல் இருப்பதாகும். யோசிக்கவும் கூடாது, பேசவும் கூடாது. இதைத்தான் இதயபூர்வமான அன்பு என்று சொல்கிறார். இப்பொழுது கலப்படமாக இருக்கிறது, சிலநேரம் மனதின் அன்பு ஏற்படுகிறது, சிலநேரம் புத்தியின் அன்பு ஏற்படு கிறது. பூ மாலையின் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு மணியோடு நெருக்கத்தில் இருக்கிறது, அன்பானவர்களாக இருக்கிறீர்கள், முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்பும் தருகிறீர்கள், ஆகையால் (வெற்றி) மாலை உருவாகுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் மாலை தயாராக வேண்டும் என்றால் இரண்டு மணிகளும் சமமாக ஒருவர் மற்றொருவரோடு அன்பானவராக இருப்பது. முதலில் 108-ன் மாலை உருவாகும் பொழுது அடுத்த மாலை உருவாகும். பாப்தாதா பலமுறை மாலை உருவாக்கு வதற்கு அமர்கிறார், ஆனால் இப்பொழுது முடிவடைவதில்லை. அதாவது பாபா அதை (மாலையை) மூன்று சான்றிதழ்கள் இருக்கும் பொழுது தான் (உருட்டுவார்) உருவாக்குவார். - பாபாவிற்கு பிடித்தமானவராக இருப்பது, பிராமண குடும்பத்திற்கு பிடித்தமானவராக இருப்பது, மேலும் தனது யதார்த்தமான முயற்சியின் மீது விருப்பம். மூன்று விஷயங்களை சோதனை செய்தீர்கள் என்றால் மணி கையிலேயே நின்றுவிடுகிறது. மாலையில் வருவதில்லை. எனவே இந்த வருடம் எந்தவொரு சுலோகன் நினைவில் வைப்பீர்கள்? திரிமூர்த்தி பாபா மற்றும் விசேஷமாக மூன்று சம்மந்தங்களின் மூலம் மூன்று சான்றிதழ்களை பெற வேண்டும். மற்றவர்களுக்கு கொடுப்பதில் ஒத்துழைப்பு தருவது. மாலையின் அருகாமையின் மணி ஆக வேண்டும். எனவே சுய முன்னேற்றம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டீர்களா? எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கியம். பாபா என்ன சொன்னாரோ, அதை பிரம்மா பாபா செய்தார், ஆகையால் வெற்றியடைவதில் நம்பர் ஒன் ஆனார். நல்லது.

பாப்தாதா இந்த ரிசல்ட்டை பார்ப்பார். ஒவ்வொருவரும் தன்னை பாருங்கள், மற்றவர்களை பார்க்க வேண்டாம். சீசனின் கடைசி நாள் என்று அனைவரும் புர்ந்துள்ளார்கள். ஆனால் பாப்தாதா சொல்கிறார் - கடைசி நாள் இல்லை, மாலை உருவாக்குவதில் கடந்த கால சீசனில் நாளாக இருக்கிறது. அனைவருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்பொழுது மாலையின் மணியை உருட்ட முடியாது, பொருத்தப்படவில்லை. மூன்று சான்றிதழ்களை பெறுங்கள் மற்றும் மாலையில் வாருங்கள். எந்தளவு வெளிப்படையான நிரூபணம் தரக்கூடியவர்கள் வெளிப்படையாக முகம் மற்றும் நடத்தையில் தென்படுவார்கள், அந்தளவு திரும்பவும் புது வண்ணத்தை (நிறத்தை) பார்ப்பீர்கள். ஒருவேளை நீங்களும் இருப்பதை போன்றே இருந்தீர்கள் என்றால் வண்ணமும் கூட அப்படியே இருக்கும். ஆகையால் தன்னிடத்தில் புதுமைத் தன்மையை கொண்டு வாருங்கள். குடும்பத்திலும் கூட மிக வேகமாக முயற்சியின் புது அலையை கொண்டு வாருங்கள். பிறகு வரும் நாட்களில் அதிசயமான காட்சியை பார்ப்பீர்கள். இதுவரை நடந்தது அனைத்துமே நடந்து முடிந்துவிட்டது, இப்பொழுது காரியத்திலும் புதுமை யான ஊக்க, உற்சாகம் என்ற சிறகுகளால் பறந்துக் கொண்டேயிருங்கள்.

மற்றப்படி யாரெல்லாம் சேவையில் ஒத்துழைப்பு கொடுத்தீர்களோ, அதாவது தனது பாக்கியத்தை சேமிப்பு செய்தீர்களோ, அதை நன்றாக செய்தீர்கள். உள்நாடு மற்றும் வெளிநாடு மற்றும் நாலாபக்கங்களிலுமுள்ள சேவாதாரிகள் சேவை செய்தார்கள், ஆகையால் சேவாதாரி களுக்கு பாப்தாதா எப்பொழுதும் இதைத் தான் சொல்கிறார் - சேவாதாரி என்றாலே பாக்கியத்தை பெறக்கூடிய பொன்னான வாய்ப்பாக இருக்கிறது. இப்பொழுது இந்த பாக்கியத்தை எங்கெல்லாம் செல்கிறீர்களோ, அங்கெல்லாம் அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள், குறைத்து விட வேண்டாம். சிறிது நேரத்திற்கான வாய்ப்பு சதா காலத்திற்கு தீவிர முயற்சியின் பொன்னான வாய்ப்பை கொடுக்கிறது. சேவாதாரிகள் யாரெல்லாம் சென்றுவிட்டார்களோ, அதாவது சென்றுக் கொண்டிருக்கிறார்களோ, அனைவருக்கும் வாழ்த்துக்கள். நல்லது.

கருணை மனமுடைய அனைத்து சிரேஷ்ட ஆத்மாக்களுக்கும், சதா தன்னை சுய முன்னேற்றத் தில் பறக்கும் கலையில் அழைத்து செல்லக்கூடிய, தீவிர முயற்சி செய்யும் ஆத்மாக்களுக்கு, சதா ஒவ்வொரு நேரமும் ஒரே ஒரு பாபாவோடு அனுபவம் செய்யக்கூடிய அனுபவம் நிறைந்த ஆத்மாக்களுக்கு, சதா பாபாவின் மனதின் ஆசைகளை நிறைவேற்றக்கூடிய குலதீப ஆத்மாக்களுக்கு, சதா தன்னை மாலையின் நெருக்கத்தில் மணியாக இருக்கக்கூடிய வெற்றி ஆத்மாக்களுக்கு, எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வோடு ஒவ்வொரு நேரமும் பாபாவை பின்பற்றி பாபாவிற்கு சமமாக ஆகக்கூடிய மிக அன்பான வலது கரமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

வரதானம்:
பிராப்திகளை (பாக்கியத்தை) எமர்ஜ் (வெளிப்படுத்தி) செய்து சதா குஷியை அனுபவம் செய்யக்கூடிய சகஜயோகி ஆகுக.

சகஜ யோகத்தின் ஆதாரம் - அன்பு மேலும் அன்பிற்கான ஆதாரம் சம்மந்தமாகும். சம்மந் தத்தை நினைவு செய்வது எளிதாகும்., சம்மந்தத்தின் மூலம் தான் அனைத்து பிராப்திகளும் ஏற்படுகிறது. எங்கு பிராப்தி இருக்கிறதோ, அங்கு மனம், புத்தி எளிதாக சென்று விடுகிறது. ஆகையால் பாபா சக்திகளின், ஞானத்தின், குணங்களின், சுகம்-சாந்தியின், ஆனந்தம், அன்பின் பொக்கிஷத்தை கொடுத்திருக்கிறார். என்னவெல்லாம் விதவிதமான பிராப்திகள் இருக்கிறதோ, அந்த பிராப்திகளை புத்தியில் இமர்ஜ் (வெளிப்படுத்தினர்) செய்தீர்கள் என்றால் குஷியின் அனுபவம் ஏற்படும் மேலும் சகஜயோகி ஆகிவிடலாம்.

சுலோகன்:
யார் அனைத்து கேள்விகளிலிருந்து விடுபட்டு இருக்கிறார்களோ, அவர்கள் தான் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்.

Address

Mangalpur
123456

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Murli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Tamil Murli:

Share